Wednesday, May 26, 2021

இந்துத்துவாவுக்கு செம்படித்த பட்டேல்க்கு எதுக்கு 3000 கோடி செலவில் சிலை..? - தேச தலைவரா..? இல்ல தியாகியா..? - மக்கள் பணத்த வீணடித்த இந்துத்துவா மோடி அரசு..

இந்தியாவில் 57% மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள்.. இதில் பீஹார், ஒரிசா அதிகம். வட மாநிலங்களில் இருந்து வட மாநிலத்து மக்கள் ஆந்திரா சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, கோவை னு தென் மாநில நகரங்களில வந்து 200, 300 க்கு வேலை இப்போவரைக்கும் வந்துட்டு இருக்குற பாத்தாலே..

உலக நாடுகளில் அதிகா ஏழைகள் வாழும் நாடு பட்டியலில் இந்தியா 2வது இடம். ஏழைகள் அதிகா இருக்குற நாட்டுல 3000 கோடி செலவுல படேல்க்கு சிலை தேவை தானா?. அப்படி என்ன கழட்டிட்டான்.. படேலோட வரலாற திருப்பி பாத்தாலே காறி துப்புற மாதிரி தான் இருக்கும். அந்த வரலாற பாப்போம்.

அங்கிலேயர்களிடருந்து சுதந்திரத்திற்காக இந்துக்குகளும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடிட்டு இருக்கும் போது பிராமணர்களும், அவர்களின் மதவெறி இயக்கமான இந்து மகா சபா உறுப்பினர்களும் வெள்ளையர்க்கு ஆதாரவாக செயல்பட்டுட்டு இருந்தாங்க. பிராமண இந்து மகா சபா வின் நோக்கமே சுதந்திரத்துக்கு அப்பறம் இந்த நாட்ட இந்துராஷ்டிரமா மத்தனும், அத பிராமணர்கள் மட்டும் ஆளனும் தான்.

பிராமணர்கள் இந்த நாட்ட ஆளலனும், மத்த மக்கள் எல்லாம் இந்து மனுதர்ம படி அவங்களுக்கு கீழ அடிமையா இருக்கணுமுன்னு இந்து மகா சபாவுக்கு, காங்கிரஸ் உள்ள இருந்தே சப்போர்ட் பண்ணுனவன் தான் இந்த படேல்.

இந்தியாக்கு சுதந்திரம் கொடுத்ததும் இந்து மகா சபாவும் RSS அமைப்பும் அவுங்களையோட வேலைய பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இதோட விளைவுதான் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையும், கலவரமும். காந்தியும் காங்கிரஸில இருந்து இந்த பிரவினைய ஏத்துக்கல. இந்துகளும், முஸ்லீம்களும் ஒரே நாட இருக்கணுமுன்னு முயற்சி செஞ்சி பாத்தாப்பல.. இதோட விளைவு, காந்திய போடதுக்கு இந்து மகா சபாவும், RSS ம் பிளான் பண்ணிட்டு இருந்துச்சி.

அப்போ இந்து மகா சபா, RSS தலைமைல கலவரங்கள் தூண்டபட்டு ரெம்ப கொடுமையான சூழலுல இந்தியா இருந்துச்சி. இந்த கலவரத்துக்கு முக்கிய காரணம் RSSம், இந்து மகா சபா தான் னு நேரும், காந்தியும் நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம் பட்டேல் குறுக்க பூந்து குற்றங்கள் எல்லாம் முஸ்லீம் பக்கம் மட்டும் இருக்குற மாதிரியே பஞ்சாயத்து பேசி இந்துத்துவா அமைப்புக்கு எந்தவொரு பாதிப்பும் வராத மாதிரி பாத்துகிட்டான். கலவரம் அதிகரிக்க இவனே சப்போர்ட் பண்ணுனான்.

இந்தியா, பாகிஸ்தான் தனியா பிரிந்ததுக்கு அப்பறம் இந்தியா மதசார்மை நாடு னு அறிவிச்சாங்க. அதுக்கான சட்டத்த உருவாக்க அண்ணல் பொறுப்புல கொடுத்தது ஆங்கில அரசு. அப்பறம் நேரு பிரதமரானாரு, படேல் துணை பிரதமர், உள்துறை மிஸ்டர் பொறுப்புள இருந்தான்.

RSS,பிராமணர்கள் இந்து ராஷ்டிரம் அமைக்க முட்டா இருந்துட்டானே னு இந்துத்துவா அமைப்பு காந்திய மூணு டயம் போட திட்டம் போட்டு, மூணுமே தோல்வியில முடிச்சது.

முதலில் 1934ல் RSS புனே டவுன் ஹாலில காந்தி வண்டி மேல கையெறி குண்டு வீசுனாங்க. அப்போ ஹரிஜன் யாத்திரைக்காக காந்தி புனே வந்தாரு. பெருசா ஏதும் சேதாரம் இல்ல. 

ரெண்டாவது தாக்குதல் பஞ்ச்கனியில நடந்துச்சு. சங்கி ஒருத்தன் கத்தியோட குத்த வரும்போது பிடிபட்டான். 

பிர்லா ஹவுசில் வச்சு மகாத்மா காந்தியை கொல்ல முயற்சி நடந்துச்சு. குண்டு மேடைக்கு பக்கத்துல குண்டு வெடிச்சும் தப்பிச்சிட்டாப்ல. அப்போ திகம்பர் பேட்ஜ் ங்கிறவன காந்திய சுட சொல்லி சாவர்க்கர், நாதுராம் கோட்சே குரூப் திட்டம் போட்டு குடுத்துச்சி, அவன் சுட பயந்துட்டான். கை குண்டு வீசின RSS அமைப்பை சேர்ந்த மதன்லால் பஹாவே போலீஸ்ட்ட மாடிக்கிட்டிக்கிட்டான். விசாரணை நடந்த சமயம் போலீசார் கைக்குள் வைத்துக்கொண்டு RSSஆல் படுகொலை செய்யப்பட்டான்.

அப்பவே இந்த RSS இந்துத்துவா அமைப்பை தடை பண்ண சொல்லி பல காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் சொல்லியும் படேல் நடுவுல பூந்து பஞ்சாயத்து பண்ணி RSSச தடை பண்ணாத மாதிரி பத்துக்கிட்டான்.

4வது முறை இந்து மகா சபா சாவர்க்கர் பிளான்ல RSS அமைப்ப சேர்ந்த நாதுராம் கோட்செ காந்திய போட்டான். ஊரு பூராம் காந்திய போட்டது முஸ்லீம்தானு பரப்பி விட்டுட்டு இருந்தது இந்து மகா சபா.

நீதி மன்ற விசாரணைல காந்தி படுகொலைல RSS மட்டுமில்ல, இந்து மகா சபா சாவர்க்கருக்கும் சம்பந்தம் இருக்குனு விசாரணைக்கு இழுத்தப்போ. சாவர்க்கர காப்பாத்தணுமுன்னு, இந்து மகாசபையின் தலைவரா இருந்த சியாமா பிரசாத் முகர்ஜி மே 4 1948ல் படேலுக்கு ஒரு கடிதம் எழுதுறான் "(சாவர்க்கர்) அரசியல் கோட்பாடுகளுக்காகவே அவர் விசாரிக்கப்பட்டார் என்று பின்னாளில் பேச்சு எழும்படி எதுவும் நிகழாதவாறு பார்த்துக்கொள்வீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை”.

அதுக்கு மே 6 ல படேல் பதில்கடிதம் போடுறான் “சாவர்க்கரை குற்றவாளிப் பட்டியலில் சேர்ப்பதைப் பொறுத்தவரை சட்டம் மற்றும் நீதிமுறைமை எனும் கோணத்தில் மட்டுமே பார்க்கவேண்டுமேயொழிய அரசியல் காரணங்களை இதில் இழுக்கக்கூடாது என அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறேன்” 

காந்தி கேஷ ஒழுங்கா விசாரணை பண்ண விடல. சுட பிளான போட்டு கொடுத்த சாவர்க்கர் இந்த வழக்குல சம்பந்தப்படல னு கோர்ட்டும் அறிவிச்சது. பிராமணதத்துக்காக சேவை செய்ய இந்துத்துவா அமைப்ப எப்படியாவது காப்பாத்தணுமுன்னு RSS இந்துத்துவா அமைப்ப பட்டேல் தடை செய்யுற செஞ்சி... அடுத்து தடைய நீக்குனதும் அவன்தான்.
படேல் காங்கிரஸ்குள்ளேயே இருந்து இந்துத்துவா இயக்கங்களுக்கு பல வேலைகளை பாத்ததுக்காக இப்போ "பட்டேல் தேச தலைவர்"னு பெரிய சிலை RSS, பிஜேபி அரசால 3000 கோடி செலவுல வைக்கப்பட்டுருக்கு.. 

படேல் சிலைய செய்ய நம்மட்ட டெக்லாட்ச்சி இல்லாத காரணத்தால சீனாட்ட செய்ய கொடுத்தாங்க.. (இந்தியாட்ட இந்த சிலை செய்ய டெக்லாட்ச்சி கூட இல்ல, இதுல 182 மீட்டர் 3000 கோடி ல சிலை தேவையா னு சீன காரனே சிருச்சிருப்பான்)

பட்டேல் சிலைய செய்ய 30000 கோடி பணம் வேணுமே னு மோடி நிதி பொதுத் துறை  நிறுவனங்கள் மக்களின் கல்வி, மருத்துவம், குடிநீர் முதலான சமூக மேம்பாட்டுக்கு னுஒதுக்கி வச்ச நிதியிலிருந்து எடுத்து கொடுத்தான்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் - ரூ.900 கோடி
ஓ.என்.ஜி.சி. (ONGC) - ரூ.500 கோடி
பாரத் bட்ரோலியம் - ரூ.250 கோடி
கேஸ் ஆதாரிட்டி ஆஃப் இந்தியா - ரூ.250 கோடி
பவர்கிரிட் - ரூ.125 கோடி
குசராத் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்  - ரூ.100 கோடி
இதுதவிர, நடுவண் அரசு 2014-15 நிதிநிலை அறிக்கையில ரூ.309 கோடியில் சமூக மேம்பாட்டுக்கு ஒதுக்கும் நிதியிலிருந்து ரூ.146 னு என்னோமோ அவன் அப்பன் வீட்டு காசு மாதிரி மக்களோட பணத்த எடுத்துக்கொடுத்தான்.  

நருமதையை ஒட்டி வாழும் பழங்குடியினர விரட்டிட்டு, பல ஊர்களை அழிச்சி அவர்களின் நிலங்களைப் பறிச்சி பட்டேல் சிலை நர்மதா ஆத்து நடுல 182 மீட்டர் உயராம வச்சிட்டான். 

சிலைய வச்சதுமில்லாம சிலைக்கு கீழ 'ஒற்றுமையின் சிலை ‘Statue of Unity’ னு ஏழு மொழிகளில அத எழுதி இருந்தாங்க. தமிழ் மொழியில "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி" னு எழுந்திருந்து. இத பாத்த தமிழ் நாட்டு மொழி அரசியல் தலைவர்கள், ஆர்வலர்களும் தமிழ் தவறா எழுதிருக்கு னு கண்டம் தெரிவிச்சாங்க. அப்பறம் அது அழிக்கப்பட்டுருச்சி.

காலம் பூராம் இந்துத்துவாக்கு செம்பு தூக்குனவனுக்கு ஒற்றுமையின் சிலை னு அறிவிச்சத தான் இன்னும் ஜீரணிக்க முடியல..

இந்த பிஜேபி அரசு மக்கள் பணத்த வீணா செலவு பண்ணிட்டு இப்போ ஏழைகள பட்டினி படுகொலை பண்றாங்க. நடு ரோட்டில குழந்தைகள் ஒரு வேல சாப்பாடு இல்லாம பட்டினியால பிச்சை எடுக்கிற நிலமைக்கு கொண்டுவந்துட்டாங்க.

- குறிப்பு ( மோடி நிதி கேக்கும் போது நெறைய பேரு "நிதி எல்லாம் இல்ல.. படேல் சிலைய இரும்பு கடைல போட்டு காசு எடுக்கோ" னு பதிவில வந்தது மகிழ்ச்சியே. மக்களும் சிந்திக்க ஆரம்பிக்கணும்)

No comments:

Post a Comment