Wednesday, May 26, 2021

நீதிபதி முத்துசாமி ஐயர் எனும் முன்னாள் சங்கி - இந்தியாவின் முதல் ஐகோர்ட் நீதிபதி.

மகாராஷ்டிராவில் 16 வயதுச் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரிடம்  'அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளத் தயாரா?' னு கேக்குற உச்ச நீதிமன்ற நீதிபதி யோக்கியதை ஏதோ இப்போ பிஜேபி வந்த பின்பு தான் நீதிபதி எல்லாம் சங்கியா ஆயிட்டாங்கனு யோசிக்க வேண்டாம்.

முதல் கோணலே முற்றிலும் கோணலுங்கிற கதையா இந்தியாவின் முதல் ஐகோர்ட் நீதிபதி மிஸ்டர் முத்துசாமி அய்யர்ல இருந்தே இது தொடங்குது. "தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தவர், ஒரு ரூபாய் கூலிக்கு வேலை செஞ்சி படிச்சவர், அறிவு கூர்மையுடையவர், சிறந்த சிந்தனைவாதி, இவர் தான் இந்தியாவின் முதல் ஐகோர்ட் நீதிபதி"னு பார்ப்பர பயக நெறைய கதைகள சொல்லி பரப்பிட்டுஇருக்காங்க. 

1878 இல் முத்துசாமி ஐயரை சென்னை உயர்நீதிமன்ற ஜட்ஜ் ஆக நியமிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அந்தாலு நீதிபதி ஆகுறது பார்ப்பனர்களை தவிர யாருக்கும் புடிகல. "ஒரு பார்ப்பானை நீதிபதியாக நியமித்தால் ஜாதிகளின் அடிப்படையில்தான் நீதிகள் கிடைக்கும்"னு மெட்ராஸ் மெயில் 5.9.1878ல்  இங்கிலீஷ் நாளேட்டில் பல கண்டனங்கள் வெளியிடப்பட்டது.  

"ஒரு பார்ப்பனன் நீதிபதியா  நியமிக்கப்படுறது உங்களுக்கெல்லாம் எரியுதோ"னு ஆறு பார்ப்பன பயங்க ஒன்னு சேந்து ஒரு பத்திரிகை ஆரம்பிச்சு முத்துசாமி அய்யர் நீதிபதி நியமத்துக்கு ஆதரவா செய்திய பரப்புறாங்க. சுதந்திரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கை ங்கிற பேருல பிராமணர்களுக்கு செம்பு தூக்க ஜி. சுப்பிரமணி அய்யரால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை தான் "தீ ஹிண்டு" 

பத்திரிகை ஆரம்பிச்சு முத்துசாமி அய்யருக்கு செம்பு தூக்குற அளவுக்கு அந்தாளு நீதிபதியா இருந்து என்ன கிழிச்சிட்டாருனு பார்போம்.

இந்துமதக் கோயில்களில் தீண்டத்தகாதாரை அனுமதிக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கில், இந்த அய்யர் நீதிபதி "முஸ்லீம்களுக்கும், தீண்டத்தகாதவருக்கும், ஜாதி கெட்டவர்களும் கும்பிடுவதற்காக கோவில்கள் கட்டப்படவில்லை"னு தீர்ப்பு எழுதிருக்காப்பல.. (நாகர்கோயில் வழக்குரைஞர் பி . சிதம்பரம் பிள்ளை தம் நூலில் , "Right of Temple Entry" பக்கம் 8)

அடுத்து "சனாதன வழக்கங்களைப் பின்பற்றி நடக்காதவர்களை ஜாதிப் பிரஷ்டம் செய்திடுவது அர்ச்சகப் பார்ப்பனரின் உரிமை" னு வேற தீர்ப்பு எழுதியிருக்காப்ல. (சி . சங்கரன் நாயர் எழுதிய Auto biography of Sir.C.Sankaran Nair எனும் நூலில் பக்கம் 64)

1890ஆம்ஆண்டு சிறு பெண்கள் பூப்பெய்துவதற்கு முன்னதாக 8 வயது, 10 வயதிலயே திருமணம் செய்துவைப்பதை எதிர்த்து வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த முத்துசாமி அய்யர் "சிறுமிகளுக்கு திருமணம் செய்வது என்பது சமூக தகுதியை, மத தர்மத்தையும் பாதுகாக்கவே ஆகும். சிறுமிகளுக்கு திருமணம் என்பது புனிதச்சடங்கு,  அதை உதாசீனப்படுத்தினால் வழக்கம் மீறப்படுவது ஆகிவிடும். வேதகாலத்து சட்டங்களாதலால்பழக்கம் காப்பாற்றப்படவேண்டும். பார்ப்பனியப் பழக்கமோ, ஆரிய பழக்கமோ, வேதபழக்கமோ, புராண பழக்கமோ எதுவாக இருந்தாலும் கடைப்பிடிக்கப் படவேண்டியவை"னு சனதானத்தை காப்பாற்றியிருக்காப்ல.

அடுத்த வழக்கு "என் கணவன் வைப்பாட்டி வைத்துக்கொண்டு அவளுடன் இருப்பதால் எனக்கு அவனிடமிருந்து பிரிந்து வாழ உத்தரவும், வாழ்க்கை நடத்த நஷ்டஈடு பணமும் வழங்கவேண்டும்" னு ஒரு பெண் தொடரப்பட்ட வழக்கில இந்த ஐயர் நீதிபதி "வைப்பாட்டி வைச்சிருக்குறது குற்றமல்ல, இது இந்து தர்மத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று தான்"னு வழக்கைத் தள்ளுபடி பண்ணிட்டாப்ல. (இண்டியன் சோசியல் ரிபார்மர் நூல் 2.2.1895, பக்கம் 169)

அடுத்து ஒரு புருஷன் தன் பெண்டாட்டிய அடித்து கை உடைந்து போன வழக்கை விசாரித்த தாலுகா மாஜிஸ்திரேட் மூன்று மாத சிறைத் தண்டனை விதித்தார் . "அதெல்லாம் முடியாது நாங்க கோர்டுல பாத்துக்குறோம்"னு அந்த புருஷன் மேல் முறையீடு செஞ்ச வழக்கை நீதிபதி முத்துசாமி அய்யர், தண்டனையை நீக்கினதுமில்லாம "மனு நீதியின் படி புருஷன் பொண்டாட்டிய அடிக்கலாம் ஆகவே புருஷன் செய்தது குற்றமல்ல"னு தீர்ப்பு எழுதிருக்காப்ல. 

இந்த அய்யர் நீதிபதி எந்த வழக்கையும் விசாரிக்க போகுறதுக்கு முன்னாடி, (முக்கியமான, ஹிந்து மதம், சடங்கு பற்றிய வழக்குகளை) விசாரிக்க போகுறதுக்கு முன்னாடி திருவாரூருக்குப் போய் மடிசஞ்சிப் பார்ப்பனர்களை சந்தித்துப் பேசி, சாஸ்திர தர்மத்தை  கேட்டு தெரிஞ்சிகிட்ட பின்பு தான் தீர்ப்பே அழுதுவாப்ல. அந்தளவுக்கு பார்ப்பனிய வெறி ஊறிப்போன சங்கி தான் முத்துசாமி அய்யர்.

இந்த லட்சணத்தில நீதி வழங்குன முத்துசாமி அய்யர் 25.1,1895இல் இறந்து போனாதுக்கு அப்பறம். அய்யருக்கு செம்பு தூக்கி பத்திரிகை நடத்தின  பார்ப்பன பயலுக, உயர்நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு சிலை வைக்க வேண்டும்னு  ஆங்கிலேய அரசாங்கத்திட்ட கோரிக்கைய வச்சாங்க.

அதுக்கு பதில் சொல்ற விதமா ஆங்கிலேயே அரசு  "நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு போற்றப்பட வேண்டடிய அளவுக்கு அந்தாளு எதையாவது திறமையாக செய்திருக்கவேண்டும், அய்யர் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்ததை விட வேற எதுவும் செய்யவில்லை. முத்துசாமி அய்யர் வேலை தான் செய்தார், திறமையான நீதிபதியாக இருக்கவில்லை" னு தெளிவா சொல்லிருச்சி. 

இருந்தும் பார்ப்பனர்கள் பத்திரிகையின் மூலம் செய்திகள் வெளியிட்டு அதிக நெருக்கடி கொடுக்கவே சென்னை ஐகோர்ட் வளாகத்தில் முதல் நீதிபதி சங்கிக்கு ஆங்கிலேயர் ஆட்சியில்  சிலை வைக்கப்பட்டது.

ஒரு பார்ப்பனன் எவ்வளவு தான் படிச்சாலும், உயர் பதவியில் இருந்தாலும், வெளிநாட்டில பெரிய சயின்ஸ், டெக்னாலஜி கம்பெனில வேலை செஞ்சாலும் அவனோட மூளை சனதானத்தையும், சாணியையுதான் சுத்திட்டு கெடக்கும் ங்கிறத மாதிரி ஒரு முழு சங்கியா மனு வேதம், சனதான தர்மம், சாத்திரம் சம்பிரதாயம், பெண்களுக்கு எதிரான தீர்ப்புகள் னு பார்ப்பன மத வழக்கத்தை பாதுகாக்கவே 17 வருசம் நீதிபதியாய் இருந்த முத்துசாமி அய்யர் தான் பெண் கல்வி, விதவை மறுமணம் போன்ற சமூக சீர்திருத்தக் கொள்கைகளுக்கு ஆதரவளித்தார் னு விக்கிப்பீடியா எழுதியிருக்கானுக. இது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடிங்கிறத நாம தான் புரிஞ்சிகனும்.

No comments:

Post a Comment