Wednesday, May 26, 2021

மதவெறியை மக்களிடம் தூண்டி அரசியல் செய்யும் RSS, பிஜேபி - முஸ்லிகளுக்கு எதிராக பரப்பப்படும் கட்டுக்கதைகள் - பிராமண ஆதிக்கம்..

இந்தியா என்ற நாடு எப்போதும் ஒரே நாடாக இருந்ததில்லை, இனியும் இருக்கப்போவதும் இல்லை. மன்னராட்சி காலத்தில நாடுகள் ஒரு எல்லைகளுக்கு உட்பட்ட சின்ன தேசங்களாகவும், சமஸ்தானங்களாகவும் இருந்ததே தவிர இந்தியா ங்கிற ஒரு நாடு இருந்ததில்லை. தமிழ்நாட்டில கூட மூணு நாடுகளாக வரையறுத்து வரலாற படிச்சிருப்போம். தமிழகம் கூட ஒன்று பட்டாதாய் ஒரே ஆட்சியின் கீழ இருந்தது கிடையாது..

இந்தியாவை யாரும் இது எங்களுடயது என்று சொந்தம்கொள்ள முடியாது. குறிப்பா பிராமணர்கள். 

பிராமணர்கள் கி.மு. 1500-கி.மு.500 வாக்கில ஆடு மாடு மேச்சிட்டு, நாடோடி கூட்டமா பொதிமூட்ட முடிச்சோட ஈரான் நாட்டு வலிய வந்து கைபர் கணவாய், ஓடை னு கடந்து பஞ்சம் பொழைக்க இங்க வந்தவங்க இங்கிருந்த விவசாய மக்களொட கலந்து, உள்நாட்டுப் பழங்குடியினர அடிமையாக்கிச் மனுசாஸ்திரம் வகுத்து தஸ்யு’க்கள் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் னு அவங்களயே அடிமையாகுனாங்க. இதுக்கு ஆரீய ரிக் வேதக் காலமுனு வரலாறு இருக்கு, பார்ப்பான் எழுதின வேதத்திலயும் ஆதாரமும் இருக்கு.

ஆரியர்களான பார்ப்பனர்கள் வந்ததுக்கு பிறகு துருக்கி நாட்டுல இருந்து ரஜபுத்திரர்கள் வந்தாங்க, இங்க இருக்குறவுங்கல ஆட்சி செஞ்சாங்க. பார்ப்பனர்கள் ராஜபுத்திரர்களோட சேந்தே வேறு வேறு பகுதிய ஆட்சி செஞ்சாங்க, ராஜபுத்திரர் ஆட்சியில தலைமை குரு, அமைச்சர் னு முக்கியமான பொறுப்புள பார்ப்பனர் இருந்தாங்க. அப்போதான் ராமாயணம், மகாபாரதம் னு கற்பனை கதைகளை ரெம்ப ஆபாசமா எழுதினாங்க. அதுக்கு பிறகு சௌகான், பரிகரர், சோலங்கி னு வந்தவனெல்லாம் வெளில இருந்து இந்தியாவுக்கு வந்தவங்க தான். சீமான்டிய மாதிரி சொல்லணுமுனா எல்லா பயலும் வந்தேறிகங்தான். 

அடுத்து முஸ்லிம் மன்னர்கள் இங்க வறாங்க, வணிகம் பண்றாங்க, அப்றம் ஒவ்வொரு சின்ன சின்ன  நாட்ட புடிச்சி இங்க இருக்குற மக்களயும் ஆட்சி செயுறாங்க. முஸ்லிம்கள் ஆட்சி செய்யும் போது ராஜபுத்திரர்களோடு சேர்ந்து பிராமணர்களும் முஸ்லிம் மன்னர்கள எதுகுறாங்க. முஸ்லிம்கள் மக்கள்ட்ட பாகுபாடு காட்டாததனால ஆட்சியும் அதிக ஆண்டு தொடர்ந்துச்சி. 

அடுத்து ஆங்கிலேயர்கள் வணிகம் பண்ண வாரங்க. சின்ன சின்ன பகுதியா புடிச்சி, இவுங்க ஆச்சி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதுக்கு பக்க பலமா பிராமணர்கள் இருந்தாங்க. ஆங்கிலேயர்கள் பெரிய நிலப்பரப்ப ஒரே நிறுவாகத்துக்கு கீழ கொண்டு வந்து ஆட்சி செயுறதுக்கு வசதியா, இங்க இருக்குற சின்ன தேசங்கள், குழுக்கள், சமஸ்தானங்கள ஒன்னா இணைச்சி அதுக்கு 'இந்தியா' னு பேரு வச்சி கட்டுப்பாட்டுக்குள்ள இருக்குற மாதிரி நாட்ட உருவாகிட்டாங்க.

ஆங்கில ஆட்சிய எதிர்த்து முஸ்லீம் மன்னர்களும், இந்து மன்னர்களும் போர் செஞ்சாங்க. இது சமாளிக்க யோசிச்ச ஆங்கிலய அரசு.. இந்து, முஸ்லீம், சீக்கிய மத வேறுபாடு, பல மொழி வேறுபாடு, அடுத்து தாழ்த்தப்பட்ட, பழங்குடிகள் உள்ளிட்ட சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் னு ஒரு குரூப்ப இன்னொரு குரூப்க்கு எதிரா தூண்டிவிட்டு பிரிவினையாக்கி தொடர்ந்து ஆட்சி செஞ்சி வந்தது. 

ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் போது எப்பவும் இந்து, முசுலீம் னு பிரிச்சே தான் ஆட்சி செஞ்சதே தவற எல்லோருக்கும் பொதுவா ஆட்சி பண்ணல. சட்டங்களும் திட்டங்களும் கூட தனிதனியாவே உருவாகுனாங்க. தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள மூணாவது பிரிவா பாத்தாலும், அவுங்களையும் இந்துக்கள் னு வரையறுத்தாங்க.

ஆங்கில ஆட்சிய எதிர்த்து முஸ்லீம், இந்து மன்னர்கள் போராட்டத்துக்கு அப்றம் மக்கள் இயக்கங்கள் உருவாகி சுதந்திர கிடைக்க போராட தொடங்கிச்சி. போராட்டத்தில இந்து மக்களும், முஸ்லீம் மக்களும் மத பாகுப்பாடு இல்லாம ஒன்னா சேந்தே போராடுனாங்க. இவங்க போராட்ட நோக்கம் ஆங்கிலயர்கள விரட்டிட்டு ஒன்னா ஜனநாயக முறையில ஆட்சி அமைக்கனமுனுதான்.

இந்த போராட்டத்த எல்லாம் பாத்துட்டு இருந்த பிராமண கூட்டம் "மக்கள் ஒன்னு சேந்து போராடுனா  எப்படி இந்துராஷ்டிரம் அமைச்சி இந்து மன்னர்கள் ஆட்சி செய்யமுடியும்?"னு யோசிச்சி மத ரீதியா பிராமண இயக்கங்கள ஆரம்பிச்சது.

இதோட நோக்கம் ஆங்கிலயர்களுட்ட இருந்து நாட்ட மீட்டு ஒட்டுமொத்த இந்தியாவயும் பிராமணர்கள் மன்னரா ஆட்சி செய்யணும். இந்து நாடா மாத்தனம்" இதுக்காக, ஏற்கனவே மத இயக்கமா இருந்த பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜத்துக்கு கீழ இந்து மகா சபா னு அமைப்பு பிராமணர்களால ஆரம்பிக்கப்பட்டது.

(இப்போகூட RSS, பிஜேபி சொல்ற விசயமும் அதுதான் "இந்துராஷ்டிரம் அமைக்கணும், ராமராட்சி நடத்தணும்"ங்கிறதுதான்.)

காங்கிரஸ் இயக்கம் அறவழியில போராட்டத்த கையில எடுத்தது. காங்கிரஸ்ல இந்துக்களும், முஸ்லிம்களும் இணைஞ்சே போராட்டம் பண்ணுனாங்க. அதே சமயம் காங்கிரஸ்குள்ளயும் பிராமணர்கள் இருந்தாங்க, இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு எதிரா செயல்பட்டாங்க. 

இந்துக்களுக்கு னு தனி நாடு வேணும் னு முதலில் நாட்டு பிரிவினை வாதத்த பேச தொடங்குனது பிராமணர்கள் தான்.  1933ல் இந்து மகாசபையின் தலைவரா இருந்த பாய் பரமானந்தர் பிரிவினைக்கு முதலில் கூட்டம் போட்டு பேசுனான் "இந்தியாவை மத அடிப்படையில் இரு நாடுகளாகப் பிரிக்க வேண்டும்"னு 

அடுத்து1937ம் ஆண்டு அகமதாபாத்தில நடந்த இந்து மகாசபை மாநாட்டில அப்போ தலைவராக இருந்த சாவர்கர், “இந்தியாவை ஒற்றைத் தேசமாகக் கருத முடியாது. முக்கியமாக இரண்டு தேசங்கள் இந்தியாவிற்குள் உள்ளன. ஒன்று இந்துக்களின் தேசம்; மற்றது முஸ்லிம்களின் தேசம்” னு மக்கள்ட்ட மதவெறிய தூண்டிவிட்டு பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சுட்டான்.

அதுக்கு அப்புறம் தான் 1940 ஆம் ஆண்டு முஸ்லீம் மக்கள் ஜின்னா தலைமையில கோரிக்கை வச்சாங்க. ஆனா இப்போ வரைக்கும் வரலாறு தெரியாத சங்கிகள் நாடு ரெண்டா பிரிஞ்சத்துக்கு காரணம் முஸ்லிம்கள் தான்னு பழி சொல்லிட்டு இருக்காங்க.

இரண்டாவது உலகப்போரால பல சிக்கல்கள் ஆங்கிலேயர்களுக்கு வரவே அவுங்க கட்டுப்பாடுல வச்சிருந்த நாடுகளுக்கு சுதந்திரம் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் போது ஆங்கிலேயர்கள் ஆரம்பிச்சு வச்ச பிரிவினை வாதமே அவங்களுக்கு பெரிய பிரச்சனையா இருந்தது. மத பிரிவு அடிப்படையில நாட்டுக்கு சுதந்திரம் கொடுக்கும் போது, பூரவ குடிகளான தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மக்களை எதுல சேர்க்கிறது னு தெரியல.

முஸ்லிம்களையும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களையும் சேர்த்தால்.. நாட்டில் இந்துக்களை விட 70% அதிகமா இருந்தாங்க. இந்த 70% சேர்ந்தால் எங்க நம்ம ஆள முடியாதோ னு பல சூழ்ச்சிகள் பண்னுனதால.. ஆங்கில அரசு தாழ்த்தப்பட்ட மக்களையும், பழங்குடி மக்களையும் இந்துகளோட சேர்த்துட்டாங்க. 

இந்தியா பாகிஸ்தான் னு நாடுகள் பிரிக்கப்பட்டு பெரும்பாலான முஸ்லிம்கள் பாகிஸ்தான் போயிட்டாங்க. இங்க இருந்த எல்லா முஸ்லிம்களும் வெளில இருந்து வந்தவங்க கிடையாது. இஸ்லாமியர்கள் வருகைக்கு முன்னாடியே அரபு நாடுகளில வணிக வச்சிக்கிட்ட இந்தநாட்டு மக்கள் முஸ்லிம்களா மாறிஇருக்காங்க, கொஞ்ச பேரு பிராமண மதத்தின் கொடுமை தாங்க முடியாம இஸ்லாமிற்கு மதம் மாறியிருக்காங்க. இந்த நாட்டு முசுலீம் மக்கள் இங்கேயேதான் இருந்தாங்க. 

அப்றம் காங்கிரஸ், மற்றும் முக்கியமான தலைவர்கள் இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாடு னு அறிவிச்சாங்க. இந்து மகா சபை காங்கிரஸிட்ட இந்து நாடா அறிவிக்க சொல்லி பல முறைகள் கேட்டும், முக்கிய தலைவர்கள் மறுத்துட்டாங்க. ஜனநாயக மக்களாட்சி அமைத்து நேரு தலைமையில காங்கிரஸ் ஆட்சி செஞ்சாங்க. இதெல்லாம் பார்த்து பொறுக்கமுடியாத பிராமணர்களின் அமைப்பான இந்து மகா சபா, RSS.. பல சுதேசி தலைவர்கள கொல்ல முயற்சி பண்ணுனாங்க. மதச்சார்பற்ற ஜனநாயக நாடா அறிவிச்ச காங்கிரஸ் தலைவரான காந்திய சுட்டு கொன்னுட்டாங்க. 

காந்திய சுட்டு கொன்னது ஒரு பார்ப்பன ஐயர், ஆனால் முஸ்லீம் தான் கொன்னாங்க னு வததந்திய பரப்புனாங்க இந்துத்துவா மதவெறியர்கள்.

காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சி செஞ்சிட்டு வந்தது. காங்கிரஸ்க்குள்ள இருந்தே பல பிராமணர்கள் மதவெறிய தூண்டி மக்களாட்சிய கலைக்க பாத்தாங்க. முடியல.. காங்கிரஸ்க்கு மக்கள் மத்தியில இருக்குற செல்வாக்க எப்படி உடைக்கணுமுன்னு பிராமணர்கள் யோசிச்சாங்க. 

பிராமணர்கள் நேரடியா காங்கிரஸ்க்கு எதிரா கட்சி ஆரம்பித்து மக்கள்ட்ட ஓட்டு வாங்க முடியாது. அதுக்காக பிராமணர்கள் கையில எடுத்த ஆயுதம் "மக்கள்ட்ட மதவெறியை தூண்டி முசுலீம் மக்கள எதிரியா காட்டுறது" அதற்கான முதல் வேலையா "பாபர் மசூதியில் சிலை வைப்பு" - "ராமர் சிலை தானா வந்து பிறந்த இடத்துலேயே முலைச்சிருக்கு"னு மக்களை குழப்பமடைய வச்சாங்க.

அப்றம் காங்கிரஸ்ல இருந்து பிரிஞ்சி வந்து பிஜேபி னு ஒரு காட்சிய தொடங்குனாங்க. அடுத்தது இந்து முஸ்லீம் கலவரம் னு  திட்டம்போட்டு மதகலவரம் பண்ணுனாங்க. முஸ்லிம்களுக்கு எதிரா பல கட்டுகதைகள மக்கள் மத்தியில பரப்ப ஆரம்பிச்சங்க. இதனால இந்து முஸ்லீம் மக்களிடம் பிரிவினை அதிகமாச்சி. அடுத்து மசூதிய இடிப்பு னு  மதவெறிய சாமானிய மக்கள்ட்ட தூண்டி பிஜேபி ஆட்சிய புடிச்சது. 

இந்தியா விடுதலை ஆனதுல இருந்து பிராமணர்கள் சாமானிய மக்கள் மத்தியில பரப்புன கட்டுகதைக்கள் என்னன்னா..

முஸ்லிம்கள் படையெடுத்து இந்து கோவில்களை இடித்தார்கள் - இந்திய வரலாறு பிராமணர்களும், பிரிட்டிஷ்காரங்களும் எழுத்துனதுதான். வரலாற்றுல இடிச்ச மாதிரி எந்த ஆதாரமும் இல்ல. நல்லா ஆட்சி பண்ணுனாங்க னு கூட ஆதாரம் இருக்கு.

அயோத்தி பாபர் மசூதி ராமர் கோவிலை இடித்து கட்டப்பட்டது 
- மசூதி இருந்த இடத்தில ராமர் கோவில் இருந்ததா எந்த வரலாற்றுலயும் இல்ல, இவுங்க எழுதி வைச்ச புராணத்திலயும் இல்ல. அதனாலதான் சுப்ரீம் கோர்ட்டே இது நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு னு சொல்லுது.
இந்தியா விடுதலை ஆனதுல இருந்து.

காஸ்மீர் தீவிரவாதிகள் - காஷ்மீர் மக்கள் பழங்குடி விவசாயிகள். அவுங்க உரிமைக்காக போராடுறாங்க. ராணுவம் தான் அங்க வன்முறை செயல்கள் அதிகம் பன்னிருக்கு.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணம் முஸ்லிம்கள் 
- மேலயே சொல்லிருக்குறேன். 1943ல் முதலில் இந்து நாடு , முஸ்லிம் நாடு என்று பிரிக்க வேண்டும் ஆரம்பிச்சாவங்க இந்து மகா சபை தலைவர்கள்.

முஸ்லிம்கள் மதம் மாற்றுகிறார்கள் - இந்து மக்களை ஒன்னா கூட்டி முஸ்லிம்கள் மதம் மாத்துனா எந்த ஆதாரமும் இல்ல. விருப்பட்டு மக்களே மாறி இருக்காங்க. இளையராஜா மகன் கூடத்தான் மதம் மாறியிருக்கிறார். வரலாறு னு பாத்தா இந்துமத சாதி கொடுமைகள் தாங்கமுடியாமல் இஸ்லாமித்துக்கும், பவுத்தத்திற்கும், கிருஸ்துவத்திற்கும் மதம் மாறி இருக்காங்க. மதம் ஒழுங்கு பூ வா இருந்தா என்ன இதுக்கு மதம் மாறப்போரங்க.

முஸ்லிம்கள் பல திருமணம் பண்றாங்க - இந்தியாவில முஸ்லிம்கள விட இந்துக்கள்லதான் பலதாரமுறை அதிகமா இருந்ததுன்னு சர்வே சொல்லுது.

சகோதர வாரிசுகளை திருமணம் செய்கிறார்கள் - இந்துக்கள் சகோதரி வாரிசுகள திருமணம் பண்றாங்க. இரண்டுமே தப்புதான். ரத்த சம்பந்த உறவுகளை திருமணம் செய்யக்கூடாது னு அறிவியல் சொல்லுது.

குடும்ப கட்டுப்பாடு பண்றதில்ல

கிரிக்கெட்டு

இந்தியா பாகிஸ்தான் மேட்ச்

மாட்டுக்கறி சாபுடுறாங்க

கோரோனா வரைக்கு...

இப்படி அப்படி னு எதையாவது மக்கள் மத்தியில் பரப்பிட்டு இருக்காங்க. முஸ்லிம் இங்க அமைதியாதான் இருக்காங்க இருந்தாலும் இந்துத்துவா மதவெறியர்கள் அவுங்களேயே நோண்டிட்டு இருக்காங்க..

ஏண்டா... இந்துக்கள் 77% சதவீதம் அதிகமா இருக்குற நாட்டுல ஊருக்கு னு கணக்கு வச்சா ரெண்டு வீடு கூட இருக்கமாட்டாங்க முசுலீமு.. அவுங்கள பாத்து எதுக்கு பயப்படனும்..? அவுங்கள குறை சொல்றதால என்ன லாபம்..? 

இந்துத்துவா முஸ்லிம்கள பத்தி கட்டுகதைகள மக்கள் மத்தியில பரப்பிவிட்டதால, மக்களுக்கு முஸ்லிம்கள் மேல வெறுப்பு வரவே, இப்ப மக்களும் எந்த நிகழ்வு நடந்தாலும் அதுக்கு முஸ்லிம்கள் தான் காரணம் னு கத்த ஆரம்பிட்டான். இதெல்லாம் பிராமண இந்துத்துவா இந்த நாட்ட மதவெறி நாடாக்கி, மனுசாஸ்திர படி பிராமணரில்லாத மக்களை கீழ கேவலமா வச்சி ஆட்சி செய்யத்தான் னு மக்களுக்கு புரியல.

மக்கள் சிந்திக்காத விளைவுதான் இப்போ பிஜேபி இந்துநாடா மாத்தனும், ராமராஜ்ஜியம் அமைக்கணும், மனுநீதிய சட்டமாகனும், குழக்கல்வி திட்டம் னு ஒன்னு ஒண்ணுனா கொண்டு வந்துட்டு இருக்காங்க.

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இங்க இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் னு பல மொழி, பல பண்பாடு னு இருக்கு. இந்த நாடு யாருக்கும் தனிப்பட்ட சொந்தம் இல்ல, இது எவன் அப்பன் வீட்டு சொத்துமில்ல. இந்துத்துவா பிராமணர்கள் மதவெறியை தூண்டி, இந்தியாவின் மதச்சார்பின்மைய களைக்கிறதென்றால் அது அனைத்து மக்களையும் பாதிக்கும் என்பதை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்..

No comments:

Post a Comment