Wednesday, May 26, 2021

பழவேற்காடு - யார் நிலத்த யாருக்கு கொடுக்குறது - தமிழக 34 கடற்கரை கிராமங்களை ஆதானிக்கு கொடுத்த மோடி பாஜக அரசு...

துறைமுகம் என்பது அரசு நடத்த வேண்டும் அதுதான் பாதுகாப்பு. துறைமுகம் உருவாக்கிக்கொள்ள தனியாருக்கு அரசு அனுமதி வழங்கி நிலத்தையும் வழங்கினால் அது எப்பேர்ப்பட்ட அரசாக இருக்கும்? 

பலவேற்காட்டில் ஆதானி என்ற தனியார் நிறுவனத்திற்கு 6500 ஏக்கர் நிலப்பரப்பை வாரி வழங்கியுள்ளது பாஜக மோடி அரசு. 

யார் நிலத்த யார் வாரி வழங்குறது? மோடி அரசு ஆதானிக்கு கொடுத்த நிலமெல்லாம் பாலவேற்காடு பகுதியில வாழுற 34 கடலோர கிராமத்த்தை சார்ந்தது. இந்த கிராமங்கள் பூராமே கடற்கரையயும், பழவேற்காடு எரியையும் நம்பித்தான் வாழ்ந்துட்டு வறாங்க. 

மனிதனுக்கு அவன் வாழுற நிலம் தான் அடையாளம். நிலைத்த புடிக்கிட்டு அவன வேற எங்கயாது வாழ்ந்துக்கோ னு துரத்தி அனுப்புனா அது அகதி. ஆதானி நிறுவனம் மோடியை வைத்து 34 கிராம மக்களை துரத்தும் வேளைய தான் இப்போ மும்முரமா செஞ்சிட்டு வருது. 

"தானா வந்து நிலத்த கொடுக்குறவுங்களுக்கு அதிக பணம்" னு அறிவிச்சிருக்காணுக. 
அப்போ கொடுகலனா....? 
நம்ம தான் புரிச்சிக்கிறனும் என்னனு..

பழவேற்காடு பகுதி 1900 கால வரலாறு. இங்க வாழுற பூர்வீக மக்கள் எல்லோரும் கடல்சார்ந்த தொழில் செஞ்சி இப்போவரைக்கும் வாழ்ந்து வறாங்க. சென்னை என்பது வெறும் 400 ஆண்டு கால வரலாறு தான். பாலவேற்காடு அதன் துறைமுகம் என்பது வெள்ளையர்கள் இங்கு நுழைவதற்கு முன்பு இருந்ததே இருந்தவையாகும். 

இந்தியாவின் இராண்டாவது பெரிய ஏரி பழவேற்கட்டு ஏரி. இங்கு பறவைகள் சரணாலயம், கடல் சார்ந்த வளங்கள், கடல் உயிரினங்கள், பசுமையான காட்டு நிலங்கள் னு நிறைய இருக்கு. இது தெரிஞ்சி தான் ஆதானி குழுமம் மோடியை வச்சி இந்த நிலத்த ஆக்கிரமம் செஞ்சிருக்கானுக. 

ஆதானிக்கும் அம்பானிக்கும் மோடி புரோக்கர் வேலை செய்ய வெளிநாட்டுகளுக்கு போயி கார்ப்பரேட் கம்பெனிகாரங்ககிட்ட டீல் பேசி 6 வருசமா அவனுகளுக்கு உறிவிவிட்டது பத்தாதுன்னு இப்போ தமிழ்நாட்டுல இருக்குற நிலைத்த தூக்கி கொடுத்திருக்கான். 

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு புரோக்கர் வேலை செய்யத்தான் இந்த பாஜக காவி அரசு இருக்கே ஒழிய மக்களுக்காக இல்ல. 

பழவேற்காடு மக்கள் நீண்ட நாள் கவர்மெண்ட்கிட்ட வச்ச கோரிக்கை "ஏரிய தூர்வாரனும்"ங்கறது தான். அதுக்கு அரசு ஒப்புதல் கொடுக்குற மாதிரி கொடுத்துட்டு, ஆதானி ஆக்கிரமிப்புக்காக எந்த ஒரு தூர்வாருற வேலையும் செய்யம போலீசை வச்சி கட்டையை போடுது. 

ஆதானிக்கு மோடி கொடுத்த 6500 ஏக்கர் இடத்தில 2000 ஏக்கர் நிலம் கடல் பகுதில இருக்கு. இப்போ ஆதானி துறைமுகம் கட்டுறதுக்கு, காமோண்ட் சுவர் எல்லாம் கட்டி கடல துர்வாரிட்டு இருக்கான். ஏண்டா இப்படி பண்றீங்க னு அமைதியா கேட்டா கூட காரணமே சொல்லாம உள்ள தூக்கி போடுது காவியின் எச்சில வாழுற காவல்துறை.

தமிழ்நாட்டுல வந்து நிலத்த புடுங்குற ஆதானி யார்டா னு பாத்தா.. இவன் 15 வருசத்துக்கு முன்னாடி ஜவுளி கடை நடத்திட்டு வந்துருக்கான். நம்ம ஊருல இருக்குற போதிஸ், சரணவா ஸ்டோர்ஸ் லெவல் கூட இருக்காது. அப்றம் வைர வியாபாரத்துல புரோக்கர் வேலை பாத்து அப்போ குஜராத் முதல்வரா இருந்த மோடிய உருவி 10 வருசத்துல பணக்கார லிஸ்ட்ல 5 இடத்துக்குள்ள வந்துட்டான். 

மோடி பிரதமர் ஆனதும் அவன வச்சி கோவா, விசாகப்பட்டினம் னு துறைமுகத்தை 90% சேர்ல வாங்கிட்டான். இப்போ பழவேற்காடு காட்டுப்பள்ளில இருக்குற L&Tயோட 3கிலோமீட்டர் அளவுள்ள தனியார் துறைமுகத்த 90% சேர்ல வாங்குனதுமில்லாம பழவேற்காடு 6500 ஏக்கர் அளவுள்ள 34 கிராமங்க இருக்குற கடற்கரை எரியாவ மோடிய வச்சி துறைமுகத்த விரிவுபடுத்தனும் னு வாங்கிருக்கான். 

பழவேற்காடு பகுதில இதுக்கு முன்னாடி 3 கிலோமீட்டர் அளவுள தனியார் துறைமுகத்தை அமைக்க L&T க்கு இங்க இருக்குற அதிமுக, திமுக நல்லாவே வெப்பன் சப்பல பண்ணிருக்காங்க. அதனால இப்போ நடக்குற பழவேற்காடு பகுதி கிராம ஆக்கிரமிப்ப எதிர்த்து தப்பி தவறி கூட ரெண்டு கட்சியும் பேசமாட்டாங்க. 

அப்றம் நிலம் னு பேசுரவனும், தமிழ்தேசியம் னு வாய வச்சி பொழப்பு நடத்துறவனும் இத பத்தி பேசமாட்டான். ஏன்னா இவன் வாயிக்கே மோடிதான் கஞ்சி ஊத்துறான்.

வாக்கு அரசியல் நமக்கு எப்பவுமே உதவாது.. "வறட்சி இருக்குற இடத்துல தான் புரட்சி இருக்கும்" அதனால நம்மதான் போராடனும் மக்களே....

No comments:

Post a Comment