Wednesday, May 26, 2021

யார் இந்த ஜக்கி வாசுதேவ்..? கொலைகள், கற்பழிப்பு, மோசடி, நில ஆக்கிரமிப்பு - மோடி அரசு கொடுத்த "பத்ம பூஷன்" விருது..

40 வருடத்திற்கு முன்பு கோவைல இருக்குற ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலத்து கீழே கஞ்சா வித்துட்டு இருந்தவன்தான் ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ண மூர்த்தி’ என்கிற  ‘ஜாவா வாசுதேவன்’ என்கிற  “ஜக்கி வாசுதேவ்” இவனுக்கு இன்னொரு பெயரும் இருக்கு “கார்போரேட் சாமியார்”.

கஞ்சா வியாபாரம் செய்யும்போது இவனுக்கும் பிரபல ரவுடி ‘ரிச்சர்ட்டுக்கும் பழக்கம் ஏற்பட, இரண்டு பேரும் சேர்ந்தே கஞ்சா வியாபாரம் செய்துள்ளனர். பகலில் கஞ்சா விற்பனை இரவில் விபச்சார பெண்களுடன் உறவு என்று இருந்த இவர்களுக்கு, தொழிலில் பிரச்சினை வர ரிச்சர்ட்டை கொலை கொலை செய்திருக்கிறான் ஜக்கி.

அதேபோல ஜக்கியின் மனைவியை இவனே கொலை செய்து விட்டான் என்ற வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளது, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாக தேடப்படும் குற்றவாளி என்று ஜக்கியை அறிவிக்கப்பட்டது.

தமிழகத்திலிருந்து தலைமறைவான கிருஷ்ணமூர்த்தி என்ற ஜக்கி மைசூரில் பதுங்கினான். மைசூர் அருகாமையில் அமைந்துள்ள கெம்மட்ட கிரி பகுதியில் ‘ரிஷி சம்ஸ்கிருதி வித்யா கேந்திரா’ என்ற யோகா பயிற்சி மையத்தில் எடுபுடியாக இருந்த ஜக்கிக்கு யோகா குருவான ரிஷி பிரபாகரிடம் நெருக்கம் ஏற்பட்டது. பின்னாளில் ரிஷி பிரபாகர் கோவையில் தன் நிறுவனத்தின் கிளையை ஜக்கி வாசுதேவ் மூலம் தொடங்க ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தான். 

இப்படி கோவையில் ஆரம்பித்த கிளையில் தன்னை ஜக்கி என்று அடையாளப்படுத்திக்கொண்டான். இவன் வளர்ச்சிக்கு இந்துத்துவா பிராமணர்களின் பத்திரிகைகளான தினமலர், தினமணி, ஆனந்த விகடன் போன்றவைகள் பெரிதும் உதவியது. மக்களிடம் இவனுடைய செய்திகளை பரப்பியது. முதலில் இது யோகா மையம் மட்டும்தான்,  நான் எந்த மதமும் இல்லை என்று அறிவித்த ஜக்கி பின்பு RSSயுடன் சேர்ந்து இந்துத்துவாவை பரப்பினான்.

1994 இல் இடத்தைப் பதிவு செய்து ஈஷா யோக மையத்தை 400 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து நிறுவிய ஜக்கி, 1996 இல் இந்திய ஹாக்கி குழுவினருக்கெனப் பிரத்தியேகமாக யோகா வகுப்பு, 1997 இல் அமெரிக்காவில் வகுப்புகள், 1998 இல் தமிழ்நாட்டு சிறைகளின் ஆயுள் கைதிகளுக்கு யோகா வகுப்பு என அடுத்தடுத்து ஜக்கியின் செயல்பாடுகள் விரிவடைந்தது.

அடுத்து “ஞானத்தின் பிரம்மாண்டம்” என்று லிங்கம் குறித்துக் கட்டுரை எழுத தொடங்கினான். அடுத்து லிங்க பைரவியின் அருமை பெருமைகளை அவிழ்த்துவிட்டான். லிங்க பைரவி வீட்டில் இருந்தால் செல்வமும் ஆனந்தமும் பெருகும் என்று பக்தர்களுக்கு ஆவலை தூண்டி, லிங்க பைரவிக்குக் கோவில் கட்டப் போகிறேன் நிதி வேண்டும் என்றான். 4.5 கோடி செலவில் லிங்கபைரவிக்குக் கோவில் கட்டும் திட்டத்தை அறிவித்த ஜக்கிக்கு  20 கோடி கிடைத்து. 

கடவுள் உருவாவதாய் கூறி பக்தர்களுக்குக் கட்டணமாக ரூபாய் 7 ஆயிரம்,10 ஆயிரம், 50 ஆயிரம் என்று ஆரம்பித்து 10 லட்சம் வரை வசூலித்தான். 50 ஆயிரத்தில் கட்டணம் செலுத்துபவர்கள் ஜக்கியின் அருகில் இருந்து கடவுள் உருவாவதை காணலாம். 10 லட்சம் செலுத்துபவர்கள் பிரகாரத்தின் உள்ளேயே அதாவது லிங்கபைரவி அருகில் இருந்தே கடவுள் உருவாவதை காணலாம். நமக்கு இது வேடிக்கையாகத் தெரியலாம் ஆனால் ஈஸாவில் இது தான் வாடிக்கை. இந்த நேரத்தில் பாஜக அரசு ஜக்கிக்கு விருது கொடுத்துப் பிரபலப்படுத்துகிறது. இதுவரை யோகா மாஸ்டராக இருந்தவன். இப்போது ஆன்மீகத் தலைவராக அவதரித்துவிட்டான். 

ஜக்கி பல கொலைகள், கொள்ளை, கற்பழிப்பு, குற்றவாளிகளை மறைத்து வைத்து என்று பல இல்லீகள் வேலைகளையும் செய்தான். ஜக்கியின் சீடர்கள் இன்று ஆண்களும் பெண்களுமாக 4000 பேர் இருக்கின்றனர். இவர்களில் பலர் தங்கள் சொத்துகளை ஜக்கியிடம் ஒப்படைத்து விட்டு துறவிகளாக ஜக்கியின் சேவகர்களாக வாழ்கின்றனர். தங்கள் குழந்தைகளை ஜக்கியிடம் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பெற்றோர்கள் ஏராளம். 

நல்ல வேலையில் இருக்கும் பெண்களை இன்று மொட்டை போட்டு காவி உடை அணிவித்து தான் நடத்தும் கார்ப்ரேட் ஆன்மீக சாம்ராஜ்ஜியத்துக்குச் சேவை செய்ய வைத்துள்ளான். பெண்களை வசியம் செய்து கற்பப்பையை நீக்கி விடுகிவிடுவது, ஆசிரம கொலைகள், குழந்தைகளை பெற்றோர்கள் பார்க்க அனுமதி இல்லை, பக்தர்கள் தற்கொலை என்று ஏராளமான வழக்குகள் ஜக்கி மேல் பதியப்பட்டுள்ளது. மதவாத கும்பல் ஆட்சி செய்வதால் எந்த வழக்கிற்கும் நீதி கிடைக்கவில்லை.

ஈஷா யோகா மையத்தில் நீராடுவதற்கு ஆண்களுக்கு ஒன்று பெண்களுக்கு ஒன்று என இரண்டு குளங்கள் இருக்கிறது. இரண்டிலும் பாதரசத்தால் செய்யப் பட்ட லிங்கம் நீருக்குள் மூழ்கிய நிலையில் இருக்கும் . பாதரசத்தை இப்படிப் பொதுவெளியில் பயன்படுத்தக் கூடாது, அது ஆபத்தானது. சுவாச பிரச்சனையை ஏற்படுத்தக் கூடியது. சமீபத்தில் அந்தக் குளத்தில் குளித்த மாணவர் ஒருவர் எந்த விபத்தும் இன்றி இறந்து போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகார வர்க்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதிகார வர்க்கம் தான் நடவடிக்கை எடுக்கவில்லை அரசு என்ன செய்தது என்று கேள்வி எழலாம். மத்திய அரசு (2017 ஆம் ஆண்டு ) நாட்டின் உயர்ந்த விருதான `பத்ம விபூஷண்` வழங்கி கவுரவித்தது. 

பிரதமர் மோடி நேரில் வருகை தந்து ஆதியோகி சிலையை திறந்துவைத்தார். சிலை அமைக்கப்பட்ட  இடம் மொத்தம் 44 ஏக்கர் அளவைக் கொண்டது. இந்த நிலம் அச்சு சாமி கவுண்டர் என்பவர் வினோபாவேயின் பூமிதான இயக்கத்திடம் ஒப்படைத்து, அது அச்சுசாமி கவுண்டரிடம் பண்ணை ஆட்களாக இருந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த 13 குடும்பங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. 

இன்று அந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டு ஜக்கியிடம் இருக்கிறது. அங்கு தான் ஆதியோகி சிலை தியான நிலையில் அமர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மீட்டு தர ராஜ்குமார் என்ற இளைஞர் முயன்றார். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த செல்வி. ஜெயலலிதாவை (21-1-2008) நேரில் சந்தித்துப் புகார் அளித்து உதவுமாறு கோருகிறார். புகார் கொடுத்த ஐந்து நாட்களில் (26-1-2008) ராஜ்குமார் கொலை செய்யப்பட்டார். வழக்கு ஒன்னுமில்லாமல் போனது. இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது. இதனால் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடத்தை இடிக்கும்படி தமிழக அரசு 2012-ம் ஆண்டு நோட்டீசு அனுப்பியது. சட்டத்தால் ஜக்கியை ஒன்னும் செய்யமுடியவில்லை.

அடுத்து, ஆசிரமத்தில் இருக்கும் லதா மற்றும் கீதா ஆகியோர்களின் பெற்றோர்களான காமராஜ், சத்தியஜோதி தம்பதிகள் முன்வைத்திருக்கும் முக்கிய குற்றச்சாட்டுகள் தங்கள் மகள்களை ஜக்கி ஏமாற்றி வலுக்கட்டாயமாக அடைத்து வைத்திருக்கின்றார் என்பது மட்டும் அல்ல. தங்கள் பெண்களுக்குக் கருப்பை நீக்கம் செய்திருக்கின்றார்கள் என்பது போன்ற பயங்கரமான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து இருக்கின்றார்கள். எந்த நீதிமன்றமும் இவ்வழக்கை கண்டுகொள்ளவில்லை. இப்போது பெற்றோருக்கு மகள்களை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இப்படி இந்தப் பொறுக்கியின் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேர்தல் நேரம் திருப்பூர் அருகில் பிடிபட்ட கண்டைனர் பணமும் இவன் ஆஸ்ரமத்திற்கு சொந்தமானதுதான். மோடியால் அது மறைக்கப்பட்டுவிட்டது.

இதையெல்லாம் அறிந்த பத்திரிகை நிருபர்கள் நேரம் வரும் போது ஜக்கியிடம் இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும் என இருந்த நிலையில்... கோவை வ.உ.சி. மைதானத்தில் ஆனந்த அலை மகா சத் சங் நிகழ்ச்சியில் சுமார் 25 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் மாதம் இரு முறை வெளிவரும்‘ஆயுதம்’ இதழின் செய்தியாளராக பணியாற்றி வந்த மூத்த பத்திரிகை யாளர் எஸ். பூபதி கண்ணன் என்பவர் ஜக்கியைப் பார்த்து கீழ் வரும் கேள்விகளை சரமாரியாக கேட்கத் துவங்கினார்..

1. உங்கள் யோகா மையத்தில் வெளிநாட்டில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது உண்மையா?

2. மேலும் யோகா மையத்திற் குள்ளும் உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களி லும் வெளிப்புற மரங்களிலும் இரகசிய கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறதே உண்மையா?

3. உங்கள் பெயரை ஜாவா வாசுதேவ் என்பது எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்?இதுவும் உண்மையா?

4. மேலும் 1970 ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது உண்மையா? 

கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உடனே ஜக்கி செய்தியாளரைப் பார்த்து, “உனக்கு மனநிலை பாதிக்கப்ப்டடதுபோல உள்ளது. அதனால்தான் கேள்விகளை இப்படி கேட்கிறாய்” என்று கூற, சக பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைய – மீண்டும் ஜக்கியின் மனைவியின் சாவில் இருக்கும் கேள்விகளைக் கேட்டபோது, அருகில் இருந்த அவருடைய சீடர் களிடம் மௌனமாக ஜாடை காட்ட, 4 குண்டர்கள் செய்தியாளரை வெளியே தூக்கிக் கொண்டு வந்து ஒருவர் அவருடைய வலது கையை முறுக்கிக் கொண்டும், இன்னொருவர் அவருடைய பாக்கெட்டிற்குள் பத்திரிகையில் இவர் பணிபுரியும் அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டும் மற்றும் 2 பேர் தோள் பட்டை யில் சரமாரியாக தாக்கினார்கள். வலி தாங்க முடியாமல் கத்தியபோது, சக பத்திரிகை யாளர்கள் வெளியே வந்து பார்த்தவுடன் தாக்குதலை நிறுத்தினர்.

இது சம்பந்தமாக அன்று இரவே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தி மறுநாள் (14.2.2011) அன்று காலை சுமார்100க்கும் மேற்பட்ட நிருபர்கள் ஈஷா மையம் ஜக்கி மீது புகார் கொடுத்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன் அடிப்படையில் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல்நிலைய ஆய்வாளர் நகல் பிரதியை வழங்கினார். நகலின் பதிவு எண்.433/1808. இது இன்று வரை கிணற்றில் போட்ட கல் போல நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட ஏமாற்று, கற்பழிப்பு, கொலைகாரனுக்கு தான் மோடி "பத்ம பூஷன்"விருது வழங்கியிருக்கிறான். 

பல குற்றவழக்குகள்  ஜக்கி மீது இருப்பதால், இந்த விருதை அவனிடம் திருப்பி வாங்குகள் என்று போடப்பட்ட வழக்கு கூட இன்னும் விசாரிக்காமல் நிலுவையில் உள்ளது.

No comments:

Post a Comment