Wednesday, May 26, 2021

மக்களை திசை திருப்பும் மோடி - பொய், சர்ச்சைகளை பரப்பி மக்களை முட்டாளுக்கும் காவி கும்பல் - அரசின் செயல்திட்டம் என்ன? செய்து கிழித்தது என்ன..?

வைரஸின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகமாகும் வேளையில் மோடி அரசு இது வரை எந்த திட்டடமும் இல்லாமல் மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு சாவதை வேடிக்கை பார்ப்போதோடு இந்துத்துவா RSS கும்பலை தூண்டிவிட்டு அரசுக்கு எதிராக  கேள்விகேட்கும் மக்களை திசை திருப்பும் வேலையை செய்துகொண்டு வருகிறது.

மோடியின் இந்த கேவலமான செயல்பட்டால் நாட்டின் பல மாநிலங்களில் இந்துத்துவா மதவெறியர்கள் மக்களிடம் மத விரோதமான கருத்துகளையும், போலி தகவல்களையும் பரப்பிக்கொண்டு வருவது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.

ஊரடங்கு பிறப்பிக்கும் போதிலிருந்தே மோடியிடம் என்ன செயல்திட்டம் இருக்கு? என்று கேள்விகள் நாடெங்கும் எழும்போது, மோடியின் இந்துத்துவா கைக்கூலி உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ நந்த் கிஷோர் குர்ஜா ஒரு வீடியோ வெளியிடுகிறான். "ஊரடங்கு உத்தரவை மீறுவோர் கால்களை முறிக்குமாறு  காவல்துறையைக் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் கேட்கவில்லையென்றால் அவர்களின் காலில் சுடுங்கள். அவர்கள் தேச விரோதி போல நடத்தப்படவேண்டியவர்கள்.  ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களின் கால்களை உடைத்தாலோ, துப்பாகியால் சுட்டாலோ அவர்களுக்கு நான் 5,100 ரூபாய் பரிசளிப்பேன்" என்று பகிரங்கமாவே எச்சரிக்கிறான்.

மக்களும், சமூக ஆர்வலர்களும் இந்த வீடியோக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்க.. மோடியின் செயல்திட்டம் என்ன என்பதை கேட்கதை மறந்து இவனின் வீடியோவிற்கு விளக்கம் கேட்க தொடங்கிவிட்டனர்.

மோடியின் கையாலாகாத தனத்தை மறைக்கவே கை தட்ட சொல்லி விளக்கு பிடிக்க சொன்னார்கள். பல பிஜேபி சங்கிகளும், மதவெறியர்களும் கோரோனா  வைரஸை ஒழிக்க மோடியை பின்பற்றுங்கள் என்று மக்களுக்கு விளம்பரபப்படுத்தி டெல்லில் இருந்து சொந்த ஊருக்கு உண்ண உணவு இல்லாமல் காலில் செருப்பு இல்லாமல் நடந்து சென்றதில் குழந்தைகள் உட்பட 22 பேர் பசியால் முடியாமல் இறந்த செய்தியை மறைத்தே விட்டார்கள்.

22 பேர் மரணங்கள், 30000 மக்கள் இடப்பெயர்வு என்ன செய்கிறது மோடி அரசு? என்று மக்கள் கேள்விகள் கேட்க்கையில், பதில் சொல்ல தெரியாமல் மோடி முழித்துக்கொண்டிருந்த வேளையில், அவனின் கைகூலியான  RSS மதவெறிக்கூட்டம், "கொரோனா வை முஸ்லிம்கள் பரப்புகிறார்கள்" என்று வந்தியை பரப்பினார்கள். மக்களை கேள்வி கேட்கவிடாமல் திசை திருப்பினார்கள்.

இதன் விளைவாக பல இடங்களில் முஸ்லிம்கள் அடித்து கொல்லப்பட்டனர். பல பகுதிகளில் முஸ்லீம் மக்கள் வாழ அனுமதி மறுக்கப்பட்டது

கொரோனா நோய்த்தொற்றுக்கு முதல் காரணம் மோடி தான். வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர்களை 40000 பேரை எந்த மருத்துவ பரிசோதனையும் செய்யாமல் ஜனவரியில் இருந்து மார்ச்18 வரை சொந்த ஊர்களுக்கு அனுப்பிய வைத்தது மோடி அரசு. பணக்கார்கள், பிராமணர்கள் என்ற காரணத்தால் அவர்களை பரிசோதிக்காமல் இப்போது நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்து, முஸ்லிம்கள் மேல் பழி போடுவது என்ன நியாயம் என்ற கேள்விகள் மக்களிடம் எழும்போது, வழக்கம் போல் மக்களை திசை திருப்ப..,

மோடியிடம் கேள்விகள் கேட்கவிடாமல் மக்கள் மத்தியில் சர்சைகளை பரப்ப, "இந்து மகா சபா தேசிய செயலாளரான பூஜா சகுன் பாண்டே" 5 நாளுக்கு முன்பு மோடிக்கு எழுதிய கடிதமொன்றில் தில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை, கண்டதும் சுட்டுக் கொல்ல உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இதையடுத்து சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக கருதி கடிதம் எழுதியவர் மீது வழக்குப் பதிவு செய்து, காந்தி நகர் போலீசார் கைது செய்யட்டுள்ளது.

இப்பிடி முஸ்லிம் மக்களை சுட சொன்னது யாரென்று பார்த்தால்.  கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை சுடுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய இந்துத்துவா மதவெறி நாயே தான் இது.

இப்போ இந்தியாவில் 5000 பேர்க்கு மேல் வைரஸ் பாதிப்பு அதிகமாகிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில்1000 பேருக்கு வந்துவிட்டது. இதுவரை 150 பேர் வரை இறந்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசிடம் "கொரோனாவில் மதம் பார்க்கவேண்டாம், ஈஷா மையத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் நிலை என்ன...? அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா..? என்ன நடக்கிறது அங்கே" என்று மக்கள் கேள்விகள் கேட்கின்றனர்.

அரசிடம் கேள்விகேட்கும் தமிழக மக்களை தசைதிருப்பவே இப்போ இங்கேயும் ஒரு பிஜேபி சங்கி மக்களிடம் தவாறான கருத்துக்களை பரப்பி வருகிறது.

முதலில் மோடிக்கு முட்டுக்குடுக்க, கைதட்ட சொன்ன மதுவந்தி அடுத்து, 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை ஏற்றும்போது 9 கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வரும், சக்தி கிடைக்கும், மயிர புடுங்கும் என்று மக்கள் மத்தியில் பொய்களை பரப்பியதை தொடர்ந்து, இப்போது மக்களை முட்டாளுக்கும் விதமாக "இந்தியா, 8000 கோடி மக்கள், 5000 கோடி வங்கியில் போடாட்ச்சி" என்று மக்கள் அரசிடம் கேள்விகள் கேட்க விடாமல் திசை திருப்பும் வேளையை செய்துகொண்டிருக்கிறாள்.

மோடியே மக்களிடம் அஞ்சு பத்து நிவாரண நிதி கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில், மோடி எப்படி நமது வங்கி கணக்கில் பணம் போடுவார்? இது வேண்டுமென்றே மக்களை திசை திருப்ப பரப்பப்படும் போய்கள்.

மோடியின் கைகூலியான பிஜேபி சங்கிகளுக்கு, RSS இந்துத்துவா மதவெறிவெறியர்களான பிராமணர்களும் மக்களிடம் தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைகளையும், போய்களையும், போலியான தகவல்களையும் பரப்பி மக்களை திசை திருப்பும் பணிகளை தொடர்ந்து செய்துவருகின்றனர். 

நாமும் இவர்களின் போலி பரப்புரைகளுக்கு மறுப்பு தெரிவித்து வருக்கின்றோமே ஒழிய அரசின் செயல் திட்டம் என்ன? என்பதை கேட்க மறந்துவிடுகின்றோம், அமெரிக்காவுக்கு ஏன் பயந்து மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது மோடி அரசு? என்பதை கேட்க மறந்துவிடுகின்றோம். இந்த நேரத்தில் ஏன் அயோத்தியில் அதிக செலவில் கோவில் காட்டுகிறார்கள்? என்பதை கேட்க மறந்துவிடுகின்றோம். ஈஷா மையத்திற்கு ஏன் அமரர் ஊர்தி அடிக்கடி செல்கிறது? என்பதை கேட்க மறந்துவிடுகின்றோம். ஈஷா மையத்தில் சிகிச்சை எடுக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நிலை என்ன? என்பதை கேட்க மறந்துவிடுகின்றோம். 

இதுபோன்ற காவிகளின் சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுப்பதை விட்டுவிட்டு, நமது கேள்விகளை தொடர்ந்து அரசிடம் வைப்போம். மோடியின் கையாகாலாத தனத்தை மக்களுக்கு புரியவைப்போம்.

No comments:

Post a Comment