Wednesday, July 25, 2018

என்னதான் சிவன் மேல பக்தி மயிறா இருந்தாலும் ஒரு தலித் கோவில் கருவறைக்குள் செல்லமுடியாது - நந்தன் படுகொலை - சிதம்பர ரகசியம் 2

நந்தனார் படுகொலை
நந்தனாரைப் பற்றி கேள்விப்படாதவர் தமிழகத்தில் எவரும் இல்லை. இவர் ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்தவர்.
மிகுந்த சிவபக்தி உடையவர். இவர் சிதம்பரம் நடராசரை தரிசிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டு ஒவ்வொருநாளும் முயன்று இருக்கிறார் முடியவில்லை.

அதனாலே, இவர்  “திருநாளைப் போவார்” எனப் பெயரும் பெற்றார். பிறப்பால் ‘பறையன்‘ என்ற ஒரே காரணத்தைக் கூறிக் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்று பார்ப்பனர்கள் தடுத்தனர். நந்தனின் தொல்லை பொறுக்காத பார்ப்பன நரிகள் சதி திட்டம் தீட்டின. கோயிலுக்குள் செல்ல வேண்டுமானால் நாங்கள் வளர்த்து தருகின்ற தீயில் மூழ்கியே உள்ளே செல்ல வேண்டும் என்றனர்.

நடராஜப் பெருமாள் மீது அசையாத நம்பிக்கை கொண்ட நந்தன் இதற்கு ஒத்துக்கொண்டான். பார்ப்பனர்கள் மர கட்டைகளை கொண்டு தீவைத்தனர். நந்தா! இத்தீயில் மூழ்கி உன் இழிப்பிறவியை நீக்கிக்கொண்டு அந்தண வடிவொடு சென்று அம்பலக் கூத்தனை வாழ்த்தி வணங்கு என்றனர்.

அனுமதி கிடைத்துவிட்ட ஆனந்தத்தில் நந்தன் தீயில் சிக்குண்டு வெந்து சம்பலானார். தீயில் மூழ்கிய நந்தன் சிவனோடு இரண்டற கலந்து விட்டார் என்று கதை கட்டி பாமர மக்களை ஏமாற்றிவிட்டனர்.

சதி செய்து கொன்ற ரகசியம் பார்ப்பனர்களால் தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது. அப்படி என்றால் ஆண்டவனை அடைய பார்ப்பான் கோலம் தான் யூனிஃபாமா? நந்தன் கோயிலுக்கு நுழைந்த தெற்குப் புறவழி கூட இன்று வரை அடைக்கப்பட்டு இருப்பதை இன்று கூட சிதம்பரம் கோவிலில் நீங்கள் நேரில் பார்க்கலாம்.

நந்தன் நுழைந்த வழி தீட்டு பட்டுவிட்டது என்று கூறி பார்ப்பனர்கள் அந்த வழியை முடிவிட்டனர். நந்திக்கும், நடராசருக்கும் இடையில் உள்ள வாயிலில் கல்லும், சுண்ணாம்பும் வைத்து பூசப்பட்டு விட்டது.

ஆக, அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரையும், திருநாளைப் போவார் என்று அழைக்கப்படும் நந்தனாரையும் பார்ப்பனர்கள் சதி செய்து கொன்ற இரகசியமே சிதம்பர ரகசியம் ஆகும்.
இதுதான் உண்மையான சிதம்பர ரகசியம்.

நீங்க நினைக்குற மாதிரி சிதம்பர ரகசியம் நடராஜன் சிலை டான்ஸ் ஆடுறது இடதுகாலும் இல்ல ஒரு பூளும் இல்ல. சிலையோட காலும் பூமியின் மையத்துலயும் இல்ல ஒரு மயிருலயும் இல்ல. நந்தன் கொலைய மறைக்க மக்கள ஏமாத்த பார்ப்பான் சொல்லிவைத்த கட்டுக்கதை. சிந்திப்பீர் மக்களே.. இன்றுவரையும்கூட தலித் மட்டுமில்ல வேற எந்த சாதிகாரனும் கோவில் கருவரைக்கு போகமுடியாது என்பதே உண்மை..

- டக்ளஸ் முத்துக்குமார்

No comments:

Post a Comment