Tuesday, July 31, 2018

பகுதி 12 - பாண்டவர்களின் பிறப்பு யோகியதைகள் - இதுதான்... மகாபாரத..கதை

பாண்டு இந்துதர்மத்த எடுத்து சொன்ன பிறகு குந்தி சொல்றா "அத்தான் நானும் மாத்ரியும் புள்ள வேணுமுனு, ஐயர்ட்ட படுக்க தேவையில்லை. இந்த மாதிரியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சி தானோ என்னமோ, எனக்கு கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி, எங்க அரண்மனைக்கு வந்த துர்வாசமுனிவன் ஒரு வரம் கொடுத்தான். அத ட்ரை பண்ணி பாக்கலாம்"னு சொல்றா.

அது என்ன வரம்? னு பாண்டுவும், மாத்ரியும் கேக்க, குந்தி சொல்றா "நான் யார மேட்டருக்கு நினைச்சி கூப்புடுறனோ, அவங்க என் முன்னாடி வந்து நிப்பாங்க. என்னய மேட்டர் பாத்து ஒரு குழந்தையும் கொடுப்பாங்க"னு சொல்றா.

அத கேட்ட பாண்டு "என்ன ஒரு அற்புதம்... நாம குழந்தை பிறக்க ஐயர்ட்ட போக தேவையில்ல, குந்தி நீ குயூக்கா அறக்கடவள வேண்டு. அவன் வந்து உங்கூட படுத்து புள்ள தரட்டும்."னு குந்தி பாத்து சொல்றான்.

குந்தியும் அறக்கடவுளான எமதர்மன வேண்டுறா. உடனே எமதர்மன் வந்து குந்தி முன்னால நிக்கான். "குந்தி.. நான் ரெடி நீ ரெடியா னு கேக்குறான"எமன். அப்றம் குந்தியும் எமனும் மேட்டர் பண்னுராங்க. எல்லாம் முடிஞ்சதும் எமன் சொல்றான் "குந்தி உனக்கு பொறக்க போற புள்ள நீதி தவறாம இருப்பான். தானம் தர்மம் பண்றதுல வள்ளல். தர்மன்னு கூட சொல்லலாம்"னு சொல்லிட்டு மறைஞ்சிருறான்.

குந்திக்கும் ஒரு பிள்ள பொறக்கு. குழந்தைக்கு யுதிஷ்டிரன் னு பேரு வைக்கிறாங்க. ஆனாலும் பாண்டுக்கு ஒரே குறையாவே தெரியுது. ரெண்டு பொண்டாட்டிகளயும் கூப்புடுறான். "என்னங்கடி.. எமன், புள்ளயக் குடுத்துட்டு, இவன் வளந்து பெரியவனானதும் தானதர்மம் நல்லா பண்ணுவானு சொல்லிட்டு போறான். இந்த மாதிரி பண்ணுனா யாரு சொத்த காப்பாத்துறது?"னு கேக்குறான். "அதுக்கு என்ன பண்ண அத்தான்"னு குந்தி கேக்க..

அதுக்கு பாண்டு "அடியே குந்தி.. நம்ம சொத்த காப்பாத்துர மாதிரி ஒரு பலசாலியான வாரிசு வேணும். நீ பலசாலியா இருக்குற வாயுபகவான கூப்புடு. அவன்ட மேட்டர் பாத்து எனக்கு பலசாலியான புள்ளய குடு"னு கேக்குறான். குந்தியும் சரி னு சொல்லிட்டு வாயுபகவான கூப்புடுறா. வாயுபகவானும் குந்திய பண்ணிட்டு கெலம்பிருறான். அதுல பிறந்த குழந்தைக்கு பீமன் னு பேர் வைக்கிறாங்க.

பாண்டுக்கு திரும்பவும் ஒரு குறை இருக்குற மாதிரி தெரியுது. மறுபடியும் பொண்டாட்டிகள கூப்புடுறான். "நமக்கு இப்ப ரெண்டு வாரிசு இருக்கு. வெறும் வீரத்த மட்டும் வச்சி ஒன்னும் பண்ணமுடியாது. அதனால, கல்வி, வீரம், வில்வித்தை னு எல்லாம் தெரிஞ்ச ஒருத்தன் தான் நம்ம நாட்ட ஆள்றது சரியா இருக்கும்"னு சொல்றான்.

அதுக்கு குந்தி "இப்ப யாருட்ட படுக்கணும்"னு கேக்க, "எல்லாம் கலைகளும் தெரிஞ்ச இந்திரன கூப்புட்டு பண்ணு, நமக்கு நல்ல திறமையான வாரிசு கிடக்கும்"னு பாண்டு சொல்றான். குந்தியும் சரி னு, இந்திரன நினைச்சி கூப்பிடுறா. இந்திரனும் "எப்படா நம்மள கூப்புடுவாங்க"னு எதிர்பார்த்தத போல வேமா வந்து குந்தி முன்னாடி நிக்கான்.

குத்தியும் மேட்டர்க்கு ரெடி. இந்திரன் குந்திய பண்ணி முடிச்சிட்டு சொல்றான், "குந்திக்கு பிறக்கும் குழந்தை எல்லாம் கலையும் கத்துகிட்டு செமயா வருவான். குறிப்பா வில்வித்தைல இவனா அடிச்சிக்க முடியாது. இவன் சிவன்ட்ட அஸ்திர அம்புகள் வாங்கி வித்த காட்டுவான். அதனால இவனுக்கு அர்ஜூனன் னு பேர் வையுங்க"னு சொல்லிட்டு மறைஞ்சிருறான்.

குந்திக்கு புள்ள போறந்துச்சி.அதுக்கு அர்ஜுனன் னு பேரு வச்சி மொத்தம் மூணு புள்ளகளையும் வளக்குறாங்க. குந்திக்கு மட்டும் புள்ள இருக்கு, மாத்ரிக்கு இல்லையே னு வருத்தப்பட்டான் பாண்டு. உடனே குந்திய கூப்பிட்டு "குந்தி டார்லிங்.. உனக்கு மட்டும் மூணு புள்ள இருக்கு, மாத்ரிக்கு இல்ல, அவளுக்கும் நீ அரேஞ் பண்ணி விடுடி"னு சொல்றான். குந்தியும் சரி னு சொல்லிட்டு. மாத்ரிக்கு மந்திரத்த சொல்லி கொடுக்கா.

மாத்ரி மந்திரத்த கத்துகிட்டு சூரியபகவான வேண்டுறா. சூரியனும் வந்து மாத்ரி முன்னாடி நிக்கான். "நான் ரெடி, நீ ரெடியா மாத்ரி"னு சூரியன் கேக்க, "நான் எப்பவோ ரெடி நீங்க ரெடியா''னு மாத்ரி சூரியன கூப்பிட, ரூம்குள்ள போயி, மாத்ரிய பண்ணி முடிச்சிட்டு மறஞ்சிருரான் சூரியன்.

சூரியபகவான் பண்ணுனதுல மாத்ரிக்கு ரெட்டை குழந்தை பொறக்கு. ஒன்னுக்கு நகுலன், இன்னொன்னுக்கு சகாதேவன் னு பேர் வச்சி வளக்குறாங்க..

- தொடரும்..

ஆதாரம் :
      (மஹாபாரதம் ஆதிபருவம் பகுதி 123)

No comments:

Post a Comment