Tuesday, July 31, 2018

பகுதி 5 - பீஷ்மரை தம்பி மனைவிகளிடம் உடலுறவு பண்ண சொன்ன சத்தியவதி - வம்ச விழுதுகள் - இதுதான்.. மகாபாரத.. கதை

பீஷ்மர் தன்னோட தம்பிக்கு அம்பிகை, அம்பாலிகைய கல்யாணம் பண்ணி வச்சி பல வருசம் ஆகியும் ஒரு புழுப்பூச்சி கூட உண்டாகல. ஒன்னுக்கு ரெண்டு வச்சிருந்தும், ஏன், தம்பி விசித்திரவீரியனுக்கு குழந்தை இல்லன்னு பீஷ்மர் யோசிச்சான். அந்த டயம்ல விசித்திரவீரியன் பக்கத்து நாட்டோட போர் செஞ்சி செத்துட்டான்.

என் மகன் ரெண்டு இளம் பொண்டாட்டிகள அனாதையா விட்டுட்டு செத்துட்டானே... என் வம்சம் தழைக்க இப்ப என்ன பண்றதுன்னு, மச்சகந்தி எனும் சத்தியவதி பீஷ்மர கூப்புடுறா. " பீஷ்மா உன் தம்பி இளம் பொண்டாட்டிய இப்படி நட்டாத்துல விட்டுட்டு போயிட்டான். நீதான் நம்ம வம்சம் கண்டினியூ ஆகுறதுக்கு உதவனும். நான் சொல்றபடி கேளு. உன் தம்பி பொண்டாட்டிகள நீ போட்டு நம்ம வம்சத்துக்கு நீ குழந்தைய குடு னு சொல்றா.

அதுக்கு பீஷ்மர் முடியாது னு சொல்ல " ஏன் பீஷ்மா உனக்கும் உன் தம்பிய மாதிரி எதும் வீக்னஸ் இருக்கா..? " அதுக்கு பீஷ்மர் "இல்ல சின்னம்மா, நான் வாழ்நாள் முழுவதும் தன் கையே தனக்குதவி னு ஒண்டிக்கட்டையா வாழ்வேனு எங்க அப்பன் உன்ன கட்டிக்கிறதுக்காக உங்க அப்பன்ட்ட சத்தியம் பண்ணிருக்கேன். ஆதனால என்னால இந்த ரெண்டு பொன்னுகளயும் மேட்டர் பண்ண முடியாது"னு சொல்லிட்டான்.

அதுக்கு சத்தியவதி "எனக்காகதானே நீ சத்தியம் பண்ணுன, நானே அந்த சத்தியத்த கேன்சல் பண்ணிருறேன், நீ நம்ம வம்ச விருத்திக்காக உன் தம்பி பொண்டாட்டிககிட்ட போயிதான் ஆகணும்" னு ஆழுகுறா.

பீஷ்மர் அதுக்கு "சத்தியத்த மீறுறது தர்மத்துக்கு ஆகாது. இந்த மாதிரி சுச்சுவேசன்ல நாம ரிஷி அல்லது முனிவரை கூட்டிவந்து மேட்டர் பாக்கவிடுறதுதான் முறை, அதனால முனிவர் உதவிய நாடலாம்"னு இந்து தர்மத்த விளக்கி சின்னம்மாட்ட சொல்றான்.

அதுக்கு சின்னம்மா சத்தியவதி "உங்ககிட்டயெல்லாம் ஒரு ராகசியத்த இவ்வளவு நாளா மறைச்சி வச்சிருந்தேன், அத இப்ப சொல்ற கட்டாயம் வந்துருச்சி" நீ என்ன தப்பா நினைச்சாலும் பரவாயில்ல பீஷ்மா"னு பிளாஸ்பேக் சொல்ல ரெடியாயிட்டா..

சின்னம்மா அது என்ன ரகசியம் னு பீஷ்மர் கேக்க, சத்தியவதி சொல்ல ஆரம்பிக்குறா.. "உங்க அப்பன கட்டுறதுக்கு முன்னாடி, ஒருநாள் நான் பரிசலுல பாராசரமுனிவர அக்கரைக்கு கூட்டி போகும் போது, நாங்க  ரெண்டுபேரும் பரிசலுலயே மேட்டர் பண்ணிகிட்டோம் , i mean காந்தர்வணம் பண்ணிக்கிட்டோம். அதுல பிறந்த குழந்தைய கலாப்பதீவுல விட்டுட்டோம். இப்ப அந்த குழந்தை பெரியவனா ஆகி வியாசர்முனிவரா அங்க தவம் செஞ்சிட்டு கிடக்கான். உனக்கு அண்ணமுறை தான் வேணும் பீஷ்மா"னு சொல்ல,

பீஷ்மர் ஆச்சிரியப்பட்டு போனான். "சின்னம்மா நல்ல காரியம் பண்ணுனீங்க, அந்த வியாசர்முனிவர பத்தி நானும் கேள்விப்பட்டுருக்கேன். உடனே அந்த சகோதரர வரவச்சி, தம்பி பொண்டாட்டிககிட்ட  விடணும் சின்னம்மா. அவர எப்படி இங்க வரவைக்கிறது"னு கேக்குறான்.

பீஷ்மா நான் அவனை காட்டில் விடும் போது எனக்கு அவன் ஒரு வரம் தந்தான். "நீ எப்ப என்னய நினைச்சி கூப்பிட்டாலும் வருவேன் தாயே"னு இப்ப அவனை கூப்பிடலாமா பீஷ்மா..? ன்ட்டு,

மகனே... வியாசர்முனிவா, உன் தாய்க்கு உன்னோட ஹெல்ப் தேவப்படுது. உடனே இங்க வா மகனே...

- தொடரும்

No comments:

Post a Comment