Monday, July 30, 2018

காளியாத்தா தான் பாரத மாதாவாடா..? - "தாய்நாடு" என்ற சொல்லைக்கூட சொல்ல தகுதி இருக்கிறதா இந்துவெறியர்களுக்கு...?

பெற்ற தாயைப் படுகொலை செய்வதைத் தமது பண்பாடாக வைத்துக் கொண்டே, தேசத்தைத் தனது தாயாக மதிப்பதாகப் பித்தலாட்டம் செய்யும் நாட்டை உலகில் வேறு எங்காவது காண முடியுமா..... ? அது இந்தியாதான்..

வந்தே மாதரம் முழக்கமும், பாரதமாதா படமும் பிறந்ததை முதலில் சொல்லிவிடுகிறேன்..

1882-ல் பக்கிம் "சந்திர சட்டோப்த்யாய" என்பவர் தமது நாவலின் தழுவலில் அறங்கேறிய " ஆனந்தமடம் " என்கிற மேடை நாடகத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு உருவமளிக்கிறார்.

அதில் வரும், "வந்தே மாதரம் " பாடலானது தேசபக்தி பாடலாக மாறுகிறது...

அதன் பின்னர் ரபிந்திரநாத் தாகூரின் மருமகனான அபிநேந்திரநாத் தாகூர் பாரத மாதாவிற்கு தமது ஓவியக்கலை மூலம் ஒழுங்கான உருவம் அளிக்கிறார்.

அதில் பாரத மாதா - காவி உடை உடுத்தியவளாக தலைவிரிகோலத்தில் நான்கு கைகளை உடையவளாகவும் அந்த நான்கு கைகளிலும் ஒன்றில் வெள்ளைத்துணி, ஒன்றில் கல்வி ஏடுகள், ஒன்றில் நெற்கதிர்கள் ஒன்றில் ஒரு பாசி மணிமாலை தறித்து நிற்கிறாள். இவையாவும் வழங்குபவளே இந்தியத்தாய் என்பதை பிரதிபலிப்பதாக அந்த ஓவியம் அமைத்தார்கள்.

பிறகு, விவேகானந்தரின் சீடபுத்ரியான "சகோதரி நிவேதிதா" பாரத மாதா பச்சைநிற இந்திய நிலத்திட்டின் மேல்,
கடலையும் - வானையும் தொட்டு, நான்கு தாமரைகளின் மீது நிற்பவளாக கையில் இந்திய சுதந்திரக் கொடியை ஏந்தியவளாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்றார் பிறகு, அவர் கூறிய அடையாளங்களோடு மீண்டும் பாரத மாதா மேருகேற்றப்பட்டாள்.

பிறகு, "கல்யாணி தேவகி மேனோன்" என்ற இந்து மகா சபையை சேர்ந்தவர் பாரத மாதா என்பவள் இந்தியாவில் வாழும் சகல விதமானவர்களுக்கும் தாயாவாள், அவர்கள் வணங்கும் தெய்வங்களுக்கெல்லாம் முதன்மை தெய்வமாவாள், இந்தியர்கள் எம்மதத்தினராயினும் அவர்கள் பாரத மாதாவை கடவுளாக ஏற்க வேண்டும் அதுவே தேசத்தின் மீது அவர்கள் கொள்ளும் பக்திக்கு அடையாளமாகும் என முழங்குகிறார்.

முழுவதும் இந்துக்கடவுளாகவே உருவம் கொடுத்து பாரத மாதாவை மாற்றுகிறார். நான்கு கையில் இரண்டை குறைத்து அதில் ஒன்றில் திரிசூலமும் மற்றொன்றில் தேசியக்கொடியும்  கொடுக்கப்படுகிறது. பிறகு, மாதாவின் பின்புறத்தில் ஒரு சிங்கம் (சிம்மவாஹினியாம்)
தலையில் ஒரு கிரீடம் என இப்படி புது உருவம் பெறுகிறாள்.

அதுவும் போறாத ஹிந்துத்வவாதிகள் அவளது கையிலிருந்த தேசிய கொடியை உருவி விட்டு அவர்களது இந்து மகா சபையின் கொடியான காவி கொடியை திணித்து விட்டனர்.

இந்நிலையில் காவி கபோதிகள் மதசார்பற்ற இந்திய மக்களிடம் காளியாத்தா மாதிரி ஒரு உருவத்தை காட்டி பாரத தாயாக ஏற்றுக்கொள்ள சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்வீர்கள்..?

இப்போது சொல்லுங்க மக்களே..  இப்படி கற்பனை பண்ணி காவிவெறியர்கள் புதிதாய் ஒரு கடவுளை உருவாக்கினால், நாம் அதற்க்கு பாரத் மாதா கீ சொல்லி வணங்க வேண்டுமா..?

இந்த காவி நாய்கள் ஏன் தாய் நாடு, நாய் நாடு என்று புதிதாய் வித்தை காட்டுகிறார்கள்.? இவர்கள் தாயை பற்றி பேசவும், போற்றவும் தகுதியானவர்களா..? இவர்கள் யோக்கியதை வரலாறு நெடுகிலும் இருக்கிறது. நாம் அதை பாத்தாலே காரி துப்பி விடலாம்.. இந்த இந்து வெறி நாய்களுக்கு ஏன் திடீரென்று தாய் பற்று வருகிறது..

1829-இல் பெண்டிங் பிரபு உடன்கட்டையேறுதலை குற்றமாக்கி சட்டம் இயற்றவில்லை என்றால் இருவரைக்கும் இங்க எந்த இந்து நாய்க்கும் அறிவு வந்திருக்காது. இவர்களுக்கு தாயை பற்றி பேச தாய் நாட்டை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது..?

வார்ட் என்ற ஆங்கில அதிகாரி தான் கண்ணால் கண்ட காட்சியை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்..

"கல்கத்தாவிலிருந்து சுமார் 20 மைல் தொலைவிலிருந்த மஜில்பூர் என்ற கிராமத்தில் பஞ்சா ராம் என்றவன் இறந்து விட்டான். மனைவி உடன்கட்டையேறத் தயாராகிவிட்டாள். மந்திரச் சடங்குகள் எல்லாம் முடிந்த பின்னர் சிதையுடன் சேர்த்து அவளைக் கட்டி வைத்துத் தீ மூட்டினார்கள். அப்போது இரவு நேரம். மழை பெய்யத் தொடங்கியது. தீ எரியத் தொடங்கியவுடன், பிணத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மெல்ல ஊர்ந்து வெளியேறி புதர்களுக்குள் ஒளிந்து கொண்டாள் அந்தப் பெண்.

சுற்றி நின்றவர்கள் சிதையில் ஒரு உடல்தான் இருக்கிறது என்பதை சிறிது நேரத்தில் கண்டுபிடித்துவிட்டார்கள். உறவினர்கள் கத்தினார்கள். அந்தப் பெண்ணைத் தேடினார்கள். மகன் அவளைக் கண்டுபிடித்து தரதரவென்று இழுத்தான். உடன்கட்டை ஏறிவிடு. அல்லது தண்ணீரில் முக்கிக் கொல்வோம், அல்லது தூக்கில் தொங்கவிடுவோம் என்றான் மகன்.

அவளோ பெற்ற மகனிடம் தன்னை விட்டுவிடுமாறு மன்றாடினாள். கொடூரமான முறையில் என்னை சாகடிக்காதே என்று கெஞ்சினாள். பயனில்லை. நீ சாகவில்லை என்றால் என்னை சாதியிலிருந்து விலக்கி விடுவார்கள். எனவே நான் சாக வேண்டும். அல்லது நீ சாகவேண்டும் என்றான் மகன். அவள் உடன்கட்டையேற சம்மதிக்கவில்லை. கடைசியில் அவளுடைய மகனும் உடன் இருந்தவர்களும் சேர்ந்து அவளுடைய கையையும் காலையும் கட்டி நெருப்பில் தூக்கி வீசினார்கள்.

கருணை காட்டும்படி தனது மகனிடம் கெஞ்சும் தாயை எண்ணிப்பாருங்கள். கொஞ்சம் கூட அசைந்து கொடுக்காத, இரக்கமே இல்லாத மகன், அந்த தாயின் மன்றாட்டை நிராகரிக்கிறான். இதயமே வெடிப்பது போல அவள் கதறுகிறாள். மகனோ, அவளை உயிருடன் விட்டால் தன்னுடைய சாதி போய்விடும் என்று அஞ்சுகிறான்." தாயினும் உயர்ந்ததாக சாதி, சாதியைக் காட்டிலும் தாய் உயர்ந்தவளாக இல்லை.

பெற்ற தாயை, உடன்பிறந்த சகோதரியை உடன்கட்டை ஏற்றிய வரலாறெல்லாம் உங்களுக்கு தெரியாதா..?

“ஒரு வேளை வெளிநாடு சென்ற கணவன் அங்கேயே இறக்க நேர்ந்தால், அவனுடைய மனைவி கணவனின் செருப்புகளையோ அல்லது அவனது உடைகளில் ஒன்றையோ தனது மார்புடன் சேர்த்துக் கட்டிக் கொண்டு தீப்புகுந்து விட வேண்டும்” இந்த வரலாறெல்லாம் தெரியாதா..?

இப்ப வரைக்கும் கூட கௌரவகொலைகள் என்ற பெயரில் செய்துகொண்டு தானே இருக்கிறீர்கள் உங்கள் சாதிக்காக.. இதுவும் கூட தெரியாதா நாய்களா உங்களுக்கு..?

தாய் நாடு சொர்க்கத்தைவிட உயர்ந்தது என்று இன்றைக்கு பீற்றுகிறார்களே, தாய், தாய்நாடு என்ற சொற்களை உச்சரிப்பதற்குக்கூட இவர்களுக்கு அருகதை உண்டா?

இதில "பாரத் மாதா கீ" சொல்லாதவர்கள் உங்களுக்கு தீவிரவாதியாடா..?

தாயைவிட, உடன் பிறந்த சகோதரியைவிட சாதி பெரிது என்று கருதி, தாயையே உயிர் வாழ அனுமதிக்காத ஒரு ஒரு மனிதனுக்கு, சகோதரியை கௌரகொலை செய்யும் மனிதனுக்கு தாய்நாடு என ஒன்று இருக்க இயலுமா? அத்தகைய இந்து மகன்களுக்கு கற்பனையாக கூட ஒரு தாய்நாடு இருக்க முடியாது.

No comments:

Post a Comment