Wednesday, July 25, 2018

பெண் குறி வழிபாடு, சக்தி வழிபாடு என்ற பெயரில் இந்தியாவுக்கே உரிய ஆபாச ஆன்மிகம்...

கைலாயத்திலிருக்கும் சிவன் சொன்னதைக் கேட்காமல் அவர் மனைவி பார்வதி தேவி தன் தந்தை தக்ஷனின் யாகத்தில் கலந்துகொள்கிறாள். அவமானப்படுகிறாள்.

அது பொறுக்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள் அவள் தற்கொலையைத் தடுக்க ஓடிவரும் சிவன் 51 பாகங்களாக சிதறிப்போன தன் தேவியின் உடலில் யோனி (பெண்ணுறுப்பு)  விழுந்த இடம் தெரியாமல் அல்லாடுகிறார்.

காமதேவன் பார்வதியோட யோனியை கண்டுபிடித்து வழிபடுகிறான். அந்த யோனி வழிபாட்டு ஸ்தலம் தான் இக்கோவிலாம்.
அசாம் மாநிலம் - கௌஹாத்தியில்
நீலாச்சல் மலைச் சாரலில் அமைந்துள்ளது 'காமாக்யா' சக்தி பீடம். அன்னை சதி தேவி
(பார்வதி) யின் யோனி பாகம் விழுந்த யோனி பீடமாய் இத்தலம் அறியப்படுகிறது.
சக்தி பீடங்கள் அனைத்திற்கும் முதன்மையானது யோனி பீடமே என்று புராணங்கள் அறுதியிட்டுப் போற்றுகின்றன.

அந்தயோனி மட்டுமே இங்கு வழிபடு கடவுள். கற்பாறையில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அந்தப் பாறைப் பகுதியில் நீர் கசிந்து வழிந்து கொண்டிருக்கும். பார்வதி பெண்குறியில் ஆண்டுக்கொரு முறை நான்கு நாட்கள் உதிரப் போக்கு ஏற்படுவதால் இதை மாத விலக்கு என்று சொல்லக்கூடாது. வருஷ விலக்கு எனலாம்.

இந்தக்கோவிலில் இன்றும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் கோவில் வாசலை அடைத்துவிடுவார்கள். தேவி தீட்டாகும் நாட்கள். அந்நாட்களில் திருக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது அந்த 3 நாட்கள் முடிந்தப் பின் மீண்டும் கோவில் வாசல் திறக்கும்.

இந்த மூன்று நாள்களிலும் அந்த நீரில் சிவப்பு சாயத்தைக் கலக்கிச் சிவப்பு நீர் வழிவது போல ஏற்பாடு செய்கிறார்கள். "ருது ரத்தம் (தூமை) போலக் காட்சியளிக்கச் செய்கிறார்களாம்"
பார்வதியின் மாதவிடாயாக பக்தர்களுக்கு (புனித நீராக) கொடுப்பார்கள்.

உலகெங்கும் இருந்து இந்த மூன்று நாள்களிலும் பத்து லட்சம் பக்தர்கள் அங்கே கூடுவார்களாம். சாதுக்களும், சன்னியாசினிகளும்
இங்கே கூடுவார்களாம். இந்த மூன்று நாள்களும் பூஜை, புனஸ்காரம் எதுவும் கிடையாதாம்.  பூசாரிகளும் பக்தர்களும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இந்த மூன்று நாள்களில் செவ்வாடைதான் அணிய வேண்டுமாம்
திருமணமாகாத பெண்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டுமாம்.

மூன்றாம் நாள் கடவுளச்சிக்கு `சடங்கு செய்யப்பட்டுக் கழுவிக் குளிப்பாட்டி அதன்பிறகுதான் கோயில் கதவுகள் திறக்கப்படுமாம். நாடெங்கும் வந்திருந்த பக்தர்களுக்கு சிவப்புத்துணியில் ஒரு பகுதி அல்லது ஒரு நூலிழை பிரசாதமாக
வழங்கப்படுகிறது. மாதாவின் மாத விலக்கு ரத்தம் படிந்தது எனக் கருதப்படும் இது அவர்களுக்கு `மாலை’ யாம்.
இதை வாங்கிப் பூஜை செய்து வந்தால் - நினைப்பதெல்லாம் நடந்து விடுமாம்.

இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. கருவறையிலேயே உயிர்ப்பலி கொடுக்கின்றனர். 19-ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோயிலில் மனிதர்களைப் பலி தருவது வழக்கம். பிரிட்டிஷ் அரசு அதை தடை செய்து விட்டது..

சிவனை கும்பிட லிங்கம் என்றால், பார்வதியை கும்பிட அவளோட யோனி. லூசு பயகளா.. இப்படி "சு.... யும் , பு. ......யும் கும்புடுறதெல்லாம் ஒரு பொழப்பாடா.. ." த்தூ..

- டக்ளஸ் முத்துக்குமார்

No comments:

Post a Comment