Tuesday, July 31, 2018

காஷ்மீராகி போன தமிழகம் - மக்களே ஒன்று திறளுங்கள் இது மக்களுக்கான ஆட்சியல்ல...

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத பச்சைப் படுகொலையை  அரங்கேற்றியிருக்கிறது காவி பா.ஜா.க அரசு அதை செயல்படுத்துக்கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு.

இரத்தவெறி அடங்காத காவல்துறை இன்றும் துப்பாக்கி சூட்டை நடத்தி மேலும் ஒருவரை கொன்று வெறியாட்டம் போட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக தூத்துக்குடி மக்களின் உயிரோடு விளையாடி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி  நடந்த போராட்டங்கள் எதற்கும் செவிசாய்க்காமல் நாசகார ஆலையின் விரிவாக்கத்திற்கு துணைபோவதால் மக்கள் வேறு வழியின்றி போராட்டத்தைத் துவங்கினர்.

22-ம் தேதி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடி ஆலையை மூட வலியுறுத்துவது என்பது மட்டுமே மக்களின் திட்டம்.

ஆலைக்கு ஆதரவான எல்லா நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்தது. போராட்டத்தை பிளவு படுத்தும் சதியிலும் இறங்கியது.

144 தடை உத்தரவு போட்டு முடக்க நினைத்த எண்ணம் ஈடேறவில்லை. வாழ்வா சாவா போராட்டத்தில் தூத்துக்குடியே திரண்டது.

22-ம் தேதி பகல் 12 மணிவரை அமைதியாக நடந்த ஊர்வலத்தை தடியடியால் கலைக்க முடியாத நிலையில் காட்டுமிராண்டித் தனமாக சுட்டுத்தள்ளியது.

மாவட்ட ஆட்சியர் தலைமறைவாகி மொத்த அதிகாரமும் கொலைகாரக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. எடப்பாடி அரசு திட்டமிட்டு நடத்திய பச்சைப் படுகொலை இது.

அமைதியாகப் போராடிய மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏவிவிட்டு மக்கள் வன்முறையில் இறங்கியதால்தான் தவிர்க்க முடியாமல் துப்பாக்கி சூடு என மாய்மாலம் செய்கிறது.

எல்லா  விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டு ராஜபக்சேவின் இனவெறி ராணுவம் போல் செயல்பட்டுள்ளது காவல்துறை. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம், உடல்நலம் இவற்றை விட  ஸ்டெர்லைட் முதலாளியின் லாபம்தான் முக்கியம் எனச் செயல்படும் எடப்பாடி அரசு முற்றிலும் மக்கள் விரோத அரசாக சீர்குலைந்துவிட்டது.

சற்றும் குற்ற உணர்ச்சியின்றி எகத்தாளமாக படுகொலையை நியாயப்படுத்துகின்றனர் அமைச்சர்கள்.

நியூட்ரினோ உள்ளிட்டு தமிழகத்தை நாசமாக்கும் RSS மோடி அரசின் திட்டங்களை பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்று தமிழக மக்களுக்கு துரோகமிழைகிறது எடப்பாடி அரசு.

அதிமுக பாஜக கூட்டணியின் துரோகத்தை முறியடிக்காமல் வாழ்க்கை இல்லை. காவல்துறைதான் தமிழக மக்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். RSS மோடி அரசுக்கும், எடப்பாடி அரசின் போலீஸ் ஆட்சிக்கும் முடிவு கட்டியே தீரவேண்டும். அனைத்து மக்களும் ஓரணியில் திரளுங்கள்..

No comments:

Post a Comment