Monday, July 30, 2018

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகநீதிப் போராளியுமான முத்துலெட்சுமி மறைந்த நாள் 22 ஜூலை 1968 இன்று..

இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடிய முத்துலட்சுமி, தனது சட்டமன்றச் செயல்பாடுகளின் ஊடாக தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், பாலிய விவாகங்களைத் தடை செய்யும் சட்டம் உள்ளிட்டவை கொண்டு வரப் போராடினார். இவரின் முயற்சியால் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்பட்டது.

இரண்டு பெண் குழந்தை பெற்றால் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு இன்னொரு பெண்ணை கோவிலுக்கு நேந்துவிட்டு தேவதாசியாக ஆக்கி விடுவது என்ற அவலநிலை அன்றிருந்தது.

20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவடியாக்கள்) இருந்ததாக தெரியவருகின்றது.

கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிருவாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.

இன்றைய இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியாது. இன்றைக்குப் பெண்களைப் பார்த்தீர்களேயானால் கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள், டாக்டர்கள், நீதிபதிகளாக வருகிறார்கள். இவர்களுக்கு அன்னை முத்துலட்சமி செயல்பாடுகளும், பெரியாரின் சமூக சீர்திருத்தங்களையும் பற்றி தெரிய வாய்ப்பில்லை.

முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டான். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண்விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.

இதற்கு பார்ப்பன பரதேசிகள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராடவைத்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்கள்.

அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்க தயாராக இருந்தார்.

அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினான். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார். அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றான்.

அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பாப்பானர்களை பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள்.

இனிமேல் அந்தத் தொண்டை உங்க உயர் சாதி பெண்களே செய்யட்டும். நீங்களும் புண்ணியம்  சேர்த்துக்கொள்ளுங்கள் என்று பேசினார். உங்கள் பிராமண பெண்களே தேவிடியா பணி செய்யட்டும். அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கேட்டுபோகாது என்றார்.

இதை கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வ கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது. இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழுப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment