Tuesday, July 31, 2018

தமிழ்நாடு ஒரு மதசார்பற்ற மாநிலமா...? - தயவுசெய்து மத அடையாள முத்திரையை அகற்ற போராடுங்கள் மக்களே...

இந்தியா மதசார்பற்ற நாடு என்ற கருத்து வலுவிழந்து காவிகளின் அராஜக ஆட்சி நடந்து வருகிறது என்பது நமக்கு நன்கு தெரிந்ததே.

அதே காவி பயபுள்ளைகள் தமிழ்நாட்டில் என்ன தில்லுமுல்லு பண்ணினாலும் அரசியலில் காலூன்ற முடியாது. ஏனென்றால் தமிழகம் ஒரு சமயசார்பற்ற மாநிலம், அமைதி பூத்துக் குலுங்கும் சமதர்மபூமி. பெரியார், பாரதிதாசன், காயிதே மில்லத் போன்ற பெருந்தகைகளால் பக்குவப் படுத்தப்பட்ட  பூமி , புழுதி, மயிரு, அது, இது  எதுவேண்டுமென்றாலும் நாம் பேசிக்கொள்ளலாம்.

ஆனால், தமிழகம் ஒரு மதசார்பற்ற மாநிலமா என்று தெரிந்துகொள்ள தமிழக அரசின் சின்னமாக ஒரு இந்துக்கோவில் கோபுரம் கடந்த அரை நூற்றாண்டு காலமாக இடம்பெற்று வருகிறதே, அதை உறிநோக்கினால் உண்மை புரியும்.

அது எந்த ஊர் கோவில் என்பதே பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது. அந்த கோபுரம் உண்மையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரமாகும். சென்ற வருடம் கூட 'ஆண்டாள் ஒரு தேவிடியாவா..? என்று ஒரு சர்ச்சை கிளம்பியதே, அதே கோவில்தான். பார்ப்பன பயலுக்களுக்காக கோவிலில் படுத்து பணிபுரியும் தேவதாசி ஆண்டாள் அம்மையாருக்காக கட்டப்பட்டது..

இது மதச்சார்பற்ற மாநிலம், எல்லோரும் அண்ணன் தம்பியாக பழகுகின்றோம் என வியாக்கியானம் பேசும் இயக்கங்களே... கட்சிகளே... கூர்ந்து நோக்க வேண்டிய அதி முக்கியமான விஷயத்தை எப்படி திராவிட இயக்கங்களும், கட்சிகளும் இதுவரை கோட்டை விட்டார்கள் என்று தெரியவில்லை. திராவிட இயக்கத்தின் பிதாமகர்களாக கருதப்படும் பெரியார், அண்ணா என அரசியலில் கோலோச்சியவர்கள், இப்போது முதல்வராக வீற்றிருக்கும் கலைஞர் உள்ளிட்டோர் எவ்வாறு கோட்டை விட்டார்கள்? என்று அதிர்ச்சியாக இருக்கிறது.

மதசார்பின்மையை பேணு வதில், சமூக நல்லிணக்கணத்தை கட்டிக்காப்பதில் அலட்சியம் காட்டியதால் தான் தமிழக அரசின் சின்னமாக கோவில் கோபுரம், இன்றுவரை இடம் பெற்றிருக்கிறது என்று இதைவைத்து ஆணித்தரமாக சொல்லலாம்.

ஆனைக்கும் அடி சறுக்கும் என்று ஒரு பழமொழி உள்ளது. எப்படியோ கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். போகட்டும் இருப்பினும் இன்னமும் காலம் கடந்து விடவில்லை.

சமீபத்தில் வெளியிடப்பட்ட நீதிபதி லிபரான் தலைமையிலான ஆணையம் மிக முக்கிய நெறிமுறையை அரசுகள் வழிகாட்டியாக கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் என்ற சிறப்பு வாய்ந்த, வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த பள்ளிவாசலை தகர்த்து தரைமட்டமாக்கிய சண்டாளர் களை தோலுரித்துக் காட்டிய லிபரான் ஆணையம் அரசுகளுக்கு காலத்திற்கேற்க ஒரு கடமையை பரிந்துரைத்தது.

அதில் அரசு அலுவலகங்கள் அரசாங்க முத்திரைகள், மற்றும் சின்னங்களில் மத அடையாளங்கள் இடம்பெறக்கூடாது என நீதிபதி லிபரான் தெரிவித்தார். இது வரவேற்கவேண்டியதுதான்.

இனிமேலாவது, இந்த வைணவ இந்துக்கோயிலின் சின்னத்தை, தமிழக அரசு முத்திரைஇருந்து அகற்றிவிட்டு தெற்கு கடலில் கல்லுமேல் நிற்கும் வள்ளுவரையோ இல்ல வள்ளுவர்கோட்டத்தையோ தமிழக அரசு முதிரையாக வைப்பதற்கு அனைத்து திராவிட இயக்கங்களும், கட்சிகளும் பாடுபடவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

- குறிப்பு :-
          (யாரும் செம்ப தூக்கிட்டு வரவேண்டாம். முத்திரையை மாற்ற என்ன வழியென்று யோசியுங்கள்..)

No comments:

Post a Comment