Tuesday, July 31, 2018

கட்டிட தொழிலாளர்களை படுகொலை செய்த வைணவ பார்ப்பனர்கள் -ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் ரகசியம்..

நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோவிலின் பொன் விக்கிரகத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சிறீரங்கம் கோவிலின் மதில்களைக் கட்டினான்.

ஆனால், அக்கோவிலின் மதில்களையும், கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகளுக்கோ அந்தக் கோவிலின் சின்னத்தையே அதாவது ‘நாமத்’தையே சாத்திவிட்டான்.

கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, கூலி தருகிறேன் என்று கூறி, காவிரி நடு ஆற்றில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்றுவிட்டான் ஓடக்காரன் துணையோடு.

ஆழ்வாரும் ஓடக்காரனும் கோயில் வந்து சேர்ந்தவுடன் அந்தத் தொழிலாளிகளுடைய பிள்ளைகள் இருவரையும் சூழ்ந்துகொண்டு, “எங்கள் பெற்றோர் எங்கே?” என்று கேட்டனர். “ஒரு தீவிலே பொன்னையும் பொருளையும் காட்டிவிட்டோம்; அவர்கள் அதை மூட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஆழ்வார் அவர்களுக்கு சமாதானம் சொன்னார்.

அதை நம்பாத அந்தப் பிள்ளைகள், “எங்கள் தகப்பன், பாட்டன்மாரை ஆற்றில் தள்ளிக் கொன்றுவிட்டீர்கள். அவர்களை உயிருடன் கொண்டு வந்து எங்கள் முன் நிறுத்தினாலொழிய, உங்களைப் போகவிடமாட்டோம்” என்று ஆழ்வாரை மறித்துக் கொண்டனர். ஆழ்வார் செய்வதறியாமல் விழித்து நின்றார்.

பிறகு ஆழ்வாரின் அரங்கன் கனவில் தோன்றி சொன்னதாக, அந்தத் தொழிலாளர்களின் பிள்ளைகளை அழைத்து காவிரியில் நீராடச் சொல்லி, அனைவரின் நெற்றியிலும் நாமத்தைச் சார்த்தி என் சந்நிதியில் கொண்டு வந்து நிறுத்து, பிறகு அவரவரின் அப்பன், பாட்டன்மாரின் பெயர் சொல்லி அழையுங்கள் என்றான்.

பின்பு ஆழ்வாரின் திருவருளால் அவர்கள் அரங்கனின் திருவடிகளை சேர்ந்துவிட்டார்கள். நீங்கள் ஆழ்வாருக்கு எதிராகக் கலகம் செய்யாமல், அவருக்கு சேவை செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் ‘கொள்ளிடம்‘ என்றும், அந்தத் துறைக்குப் ‘பார்வானத்துறை’ என்றும் இன்றும் உள்ளது.

சிறீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படு கின்றதே ‘சொர்க்கவாசல்’ - அது எங்கே செல்லுவது தெரியுமா?

திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் படுகொலை செய்த அந்தப் பார்வனத் துறைக்குத் தான் செல்லுகிறது. இதுதான் ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் ரகசியம்.

நானூருக்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்களைக் கொன்று குவித்தது எவ்வளவுப் பெரிய அயோக்கியத்தனம் ? சிந்தியுங்கள் மக்களே..

மார்கழி மாதம் வந்தால் சிறீரங்கம் ரங்கநாதன் கோவில் வைகுண்ட ஏகாதசி ஏகப்பட்ட பிரபல்ம். விடியற்காலை சொர்க்கவாசலில் நுழைவார்கள்.

நாம கேட்குற கேள்வி ஒன்றுதான். வருசவருசம் சொர்க்கவாசல் நுழையும் பார்ப்பன பரதேசிங்களும், அவனுக அடிவரிடிகளும் அப்படியே சொர்க்கம் போக வேண்டியதுதானடா... பிறகு ஏன்டா வீட்டுக்குத் திரும்பி வாறீங்க.. devid songs....

(ஆதாரம் - திருமங்கை ஆழ்வார் வைபவம்‘ என்ற நூல் )

No comments:

Post a Comment