Tuesday, July 31, 2018

அறிமுகம் - இதுதான் மஹா..பாரத கதை... - எழுதி பரப்பியவர்களின் அறிமுகம்..

பராசர மகரிஷியின் பையானான வேத வியாசர், எப்படியாவது இந்த பூலோகத்துக்கு மஹாபாரத கதையை எழுதி பரப்பனமுன்னு பிரமன்ன வேண்டிருக்கான்.

பிரமனும் இவனுக்கு டொங்ய் னு காட்சி  தந்து, மஹாபாரதத்த எழுத உன்னால முடியாது, அது எழுதுர அளவுக்கு ஆளும், கோலும் விநாயகன்ட்ட தான் இருக்கு அவனை புடுச்சி எழுதிக்கோ னு சொல்லிடாப்புல.. 

உடனே வியாசர்.. சத்தி, சித்தி கூட சுகமா இருந்துட்டு இருந்த விநாயகரை தன்னோட தவத்தால டிஸ்டருப் பண்ணிருக்கான்.

இந்த நேரத்துல எவண்டா கதவ தட்டுனதுன்னு வியாசர்க்கு காட்சி தந்திருக்காப்புல.

மஹாபாரத்த எழுதுர கெப்பாசிட்டி உங்களுக்கு தான் இருக்குனு வியாசர் சொன்னதும். சரி நான் எழுத ஆரம்பிச்சா என்னோட கோலு நிக்காது அதனால நீ சொல்லிட்டே இரு, நான் எழுத்திட்டே இருக்கேன் னு விநாயகன் சொல்லிருக்கான். இப்படி எழுதி முடிச்சிருக்கானுக மஹாபாரத்தை.

எழுதி முடிச்சதும் அந்த பாரத கதைய தன்னோட மகன் சுகப்பிரம்ம ரிஷிக்கு சொல்லிருக்கான் வியாசர்.

அவன் மகன் கந்தவர்களுக்கும், ராட்சசதர்களுக்கும் சொல்லிருக்கான்.

தேவர்களுக்கு நாரதர் சொல்லிருக்கான்.

கடைசியா மனிதகுலத்துக்கு வியாசரோட சிசியப்புள்ள வைசம்பாயனர் சொல்லிருக்கான்.

இப்போ இந்த மஹாபாரத கதைய தெரியாதவங்களுக்கு நான் சொல்லஇருக்கேன்.

sunday ஆனதும் ஒருபக்கம் பைபிள தூக்கிட்டு ஓடுறானுக, ஒரு குரூப்பு யாருக்குடா நெத்தில பெரிய தழுப்பு இருக்குனு போட்டி போடுரானுக.
அதனால இந்து மக்களே, நீங்களும் உங்க நீதி நூலை பத்தி தெரிஞ்சிக்கோங்க.

உண்மையிலயே உங்களுக்கு சிந்திக்கிற திறம இருந்துச்சினா, படிச்சிட்டு கேள்வி கேளுங்க. அதோடு நிக்காம நாளு பேருக்கு இது அப்பட்டியிருக்கு.., அது இப்படி இருக்குனு பரப்புங்க. கோவப்பட்டு திட்டிரமட்டும் கூடாது.

படிச்சி முடிஞ்சதும், இன்னடா இது இவ்வளவு கேவலங்கெட்ட தனமா இருக்கு னு இத தூக்கி
சுமக்குர மத்த காவிகள தூக்கிப்போட்டு மிதிச்சாலும் சரி, இல்ல.., கடவுள் ங்கிற ஒன்னே இல்லடா னு மத்த ரெண்டு பக்கிகளை கூப்பிட்டு புத்திமதி சொன்னாலும் சரி. ரெண்டும் வரவேற்கதக்கது தான்.

தொடர தொடர்ந்து படிங்க இந்து சொந்தங்களே..

No comments:

Post a Comment